Search keywords

The apt keywords for this website are swami desikan, Krishna charitam, yaadhavaabhyudhayam, krishna history, yadhava's story, lord krishna, anjsanj, desikan's kaaviyam, vishnu puranam, hari vamsam, srimad baghavatham, yadhavabhudhayam, yadhavabudhaya, swamy desikan's yadhavabhudhayam ,ஸ்வாமி தேசிகன், கிருஷ்ண சரித்ரம், யாதவாப்யுதயம்



Wednesday, September 15, 2010

யாதவாப்யுதயம் (२-ம் ஸர்கம்)



யாதவாப்யுதயம்(ஸர்கம்-2)






YADAVABHYUDHAYAM(SARGAM-2)






YAADAVAABHUDAYAM (II SARGAM)


யாதவாப்யுதயம் (2-ம் ஸர்கம்)

இந்த ஸர்கத்தில் தேவகீ வர்ணனம், மற்றும் கிருஷ்ண ப்ராதுர்பாவம் முதலானவற்றை ஸ்வாமி தேசிகன் விவரிக்கிறார் இதில் தொண்ணூற்றேழு ஸ்லோகங்கள் உள்ளன.
1. அதாகமாநாம் அநகேந பூம்நா
தர்மஸ்ய பூர்ணேந தநாகமேந

திவௌகஸாம் தர்சயதா விபூதிம்

தேவீ பபௌ தௌஹ்ருதலக்ஷணேந


தேவியான தேவகி கர்ப்பவதியானாள். அதன் அடையாளம் தோன்றுகிறது. ஆகமங்களின் தூய்மை கலந்த நிறைவோ தர்மத்தின் பூரணமான பணப்பெருக்கோ தேவர்களின் வைபவத்தைக் காண்பிக்கும் குறியோ எனலாம் படி இருக்கின்றது இந்த கர்ப்பலக்ஷணம்.


2. ச்ருங்கார வீராத்புதசித்ரரூபம்

கர்ப்பே த்ரிலோகைகநிதிம் வஹந்த்யா:

பராவர க்ரீடித கர்புராணி

த்வேதா பவந் தௌஹ்ருதலக்ஷணாநி

இதற்கு முன் ஸ்லோகத்தில் கர்ப்பசின்னங்களைக் கூறும்பொழுது மூன்று பெருமைகளைக் கூறினார். இங்கு அவைகளை இரண்டு கூறாக பகுத்து அறியலாம் என்கிறார். ச்ருங்காரம்,வீரம்,அத்புதம் என்ற மூன்று வகையான ரஸங்களை கலந்த சித்திரமேனியுடையவனான். மூவுலகங்களுக்கும் ஒரே நிதியாய் விளங்குபவன். இத்தகைய எம்பிரானை தேவகி கர்ப்பத்தில் தரிக்கிறாள். பரத்துவத்தைக் காணவல்ல குறிகளும், சாதாரணத்துவம்(அவரத்துவம்) காணவல்ல குறிகளும் இணைந்து விளங்கின. இரண்டு விதமான விளையாட்டைச் செய்பவனாக விளங்கினான்.


3. அசேஷவேதைரதிகம்யபூம்நா

ஸித்தேந ஸித்தைஸ்ச நிஷேவிதேந

அமாநுஷீ நூநம் அபூத் அயத்நாத்


க்ருஷ்ணேந கேநாபி ரஸாயநேந

எல்லா வேதங்களாலும் போற்றப்பெற்ற பெருமையுடையதும், எப்போதுமே ஸித்தமாயிருப்பதும், ஸித்த புருஷர்களாலே உபயோகிக்கப்பெற்றதுமான கருப்பு நிற ரசாயனம் ஒன்றை தேவகி உட்கொண்டுவிட்டாள் போலும். வேறு ஓர் முயற்சியுமின்றி அவள் அமாநுஷியாகி விட்டாள்.

4. ஸத ஹ்ரதா பந்துரயா ஸ்வகாந்த்யா

ஸஞ்சாரி ஜாம்பூநதபிம்பகல்பா

த்ரய்யந்தஸித்தேந ரஸாயநேந

காலேந பேஜே கலதௌதலக்ஷ்மீம்


முன் ஸ்லோகத்தில் பரத்வத்தைக் காண்பிக்கவல்ல கர்ப்பலக்ஷணத்தை விளக்கினார். இதில் வெளிப்படையான உலகரீதியில் கர்ப்பவதிகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அதன் பொலிவையும் விளக்குகிறார்.

தேவகியின் திருமேனி தனிப்பொலிவுடன் விளங்கியது. அவளது காந்தி மின்னல் போன்றதொரு அழகைப் பெற்றுவிட்டது. தங்கப்பதுமையும் நடந்து வருமோ என்று எண்ணவல்ல நிலை. அவள் வேதாந்தங்களில் ஏற்பட்டதொரு ரஸாயனத்தை உள்ளே கொண்டுள்ளாள். அதனாலே அவள் காலக்ரமத்தில் மேனியில் வெண்மையைப் பெற்றுள்ளாள். இதுவும் எவ்வளவு லக்ஷ்மீகரமாயிருக்கிறது.

5. மயூர பிஞ்ச்ச த்யுதிபிர் மயூகை:

தத்காந்திர் அந்தர்வஸதஸ் த்ரிதாம்ந:

ச்யாமா பஹிர் மூலஸிதா பபாஸே

மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ

தேவகியின் திருமேனியில் ஒரு பொலிவு ஏற்பட்டுள்ளது. அந்த சோபையை கவி தனது கண்களால் பார்க்கிறார். கருவுக்குள் வசிப்பவன் மூன்று வகையான சோதி வடிவுடையான். அவ்வொளி வெளியில் தோற்றம் அளிக்கிறது. மயில் தோகையின் நிலையும் நிறமும் எனலாம்படி இருக்கிறது. திருமேனி வெளுப்பு. ஆனால் அதன் பளபளப்பு கறுப்பு எனும்படி உள்ளது. மங்கல கார்யங்களுக்கு சுபஸூஸகமாக பாலிகை வளர்ப்பார்கள். அது முளைக்கின்றபோது அடியில் வெளுத்தும் நுனியில் கருத்தும் இருக்கும். அதுபோல் தேவகியின் திருமேனி வெளுப்பு நிறம் பெற்று அதன் மேலும் கறுப்பு நிறமும் ஓடுகிறது. கர்ப்பஸ்திரீகளின் காந்தி மாற்றம் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கே விளங்கும்.

6. காலே பபாஸே வஸுதேவபத்ந்யா:

கர்பூர லிப்தேவ கபோலசோபா

சசிப்ரபா ஸப்தமகர்ப்பகாந்தி:

ச்யுதாவசிஷ்டேவ சநைருதீர்ணா

தேவகியின் கபோல பாகம்(கன்னம்) மிகவும் அழகாக விளங்கியது. கர்ப்பம் வளர வளர இத்தகைய சோபை ஏற்படுவது இயற்கை. கர்ப்பூரத்தினால் பூசப்பட்டதோ என்று சொல்லத்தக்கதான காந்தி. ஏழாவது கர்ப்பத்தில் ஏற்பட்ட வெளுப்பு ஏற்கனவே மிஞ்சியிருந்தது. இப்பொழுது அது மெல்லியதாக தோன்றும்படியானதாக தற்போதைய காந்தி இருந்தது. இந்த வெளுப்பு சந்திரனின் ஒளியை ஒத்திருந்தது. இது சந்திர வம்சத்தின் அம்சம் எனும்படியாக இருந்தது.


7. நவேந்து நிஷ்யந்த நிபஸ் சகாஸே

வர்ண: ப்ரதீகேஷு மதுத்ரவாங்க்யா:

அந்தஸ் ஸ்த்திதேந ப்ரதமேந பும்ஸா

ப்ரவர்த்திதம் ஸத்வமிவாவதாதம்


தேவகியின் திருமேனி மதுமயமாயிற்று.அவளது அங்கங்களில் ஒரு அழகான வர்ணம் ஓடுகிறது. புதியதான சந்திரனிடமிருந்து பெருக்கெடுத்த அமுதத்தின் பெருக்கோ என்று சொல்லும்படியான அழகு! உள்ளே ஆதிபுருஷன் அமர்ந்து இருக்கிறான். அவன் தான் மேலே ஸத்வகுணத்தை ப்ரவர்த்தனம் பண்ணுகிறான் போலும். (ஸத்வம் என்பதற்கு வெளுப்பும் பொருளன்றோ).


8. கரம்பிதா கிஞ்சிதிவ ப்ரஸ்ருப்தை:

தேஜோபிர் அந்தர்வஸதஸ் த்ரிதாம்ந:

மரீசிபி: ஸ்வைரபவத் ப்ரஜாநாம்

மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ

தேவகியின் திருமேனியில் தனித்ததொரு ஒளி படர்ந்திருக்கிறது. மேற்புறம் சிறிதே படர்ந்தததால் நிறங்கள் கலந்தே நிற்கின்றன. உள்ளே வசிக்கும் த்ரிதாமாவினால் ஏற்பட்ட ஒளிகள் இவை. தேவகியின் திருமேனி காந்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன. அப்பொழுது மங்கள காரியத்திற்கு அமைக்கப்பெற்ற பாலிகை போல் அவள் திருமேனி விளங்கியது. (தேவகியின் திருமேனியை ஐந்தாவது ஸ்லோகத்தில் வர்ணித்தார் ஸ்வாமி. இப்பொழுதும் அந்த அனுபவம் கண்ணை விட்டு அகலாததாலும், மங்கலபாலிகை மனதை விட்டு அகலாததாலும் மேன்மேலும் அந்த தாத்பர்யத்தையே திருவுள்ளத்தில் இறுத்தி உவந்து விவரிக்கிறார்)


9. தஸ்யாஸ் ஸுதோல்லாஸ ஜுஷ: கடாக்ஷா:

ஸங்க்ஷுப்த துக்தோததி ஸௌம்ய பாஸ:

ஜகத் த்ரயீ ஸௌத விலேபநார்ஹாம்

விதேநிரே வர்ணஸுதாம் அபூர்வாம்

ரஸரூபியாகவும், தேஜோரூபியாகவும் எம்பெருமான் கர்ப்பத்தில் எழுந்தருளி இருக்க தேவகி பெற்ற திருமேனிப் பொலிவை பல கோணங்களில் ஸ்வாமி வர்ணித்து வருகிறார். தேவகியின் கடைக்கண் பார்வைகள் திருப்பாற்கடல் அமுதம் போல் விளங்குகின்றன. பார்வைகள் விழும் இடமெல்லாம் அபூர்வமான வர்ணம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கிறது. மூன்று உலகங்களின் உப்பரிகைகளும் சுண்ணாம்பு அடிக்கப்பெற்றது போல காட்சி அளித்தது.(மூன்று உலகங்களும் தனிநிறம் பெறப்போகின்றன என்பது ஸ்வாமியின் திருவுள்ளம்).

10. ரக்ஷாவிதௌ ராக்ஷஸதாநவாநாம்


காராக்ருஹே கம்ஸநியோகபாஜாம்


ஸம்பச்யமாநா ஸக்ருதீக்ஷிதா வா


ஸங்க்ஷோபயாமாஸ மநாம்ஸி ஸைஷா


இவள் காராக்ருஹத்தில் ரக்ஷைக்காக கம்சனால் அமர்த்தப்பட்ட அஸுரர், மற்றும் ராக்ஷதர்களுக்கு பெருங்குழப்பத்தை ஏற்படுத்திவிட்டாள். ஒரு முறை இவள் பார்த்தாலும் சரி, அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலும் சரி, அவர்கள் நடுங்கலாயினர்.9 ஸ்லோகம் வரை தேவகியின் கர்ப்ப லக்ஷணத்தை விவரித்தார். இதில் அவளைக் காண்பவர்களின் நிலையைக் கூறுகிறார்.


11. புக்தா புரா யேந வஸுந்தரா ஸா


ஸ விச்வபோக்தா மம கர்ப்பபூத:


இதி த்ருவம் ஸூசநம் ஆசரந்தீ


த்தாத்ருசம் நாடிதகம் ததாந


இதற்கு முன் எவனால் பூமி அனுபவிக்கப் பெற்றதோ அவனே(உலகத்தை அனுபவித்தவனே) எனது கர்ப்பத்தில் எழுந்தருளிவிட்டான். இந்த உண்மையை குறிப்பிடும் வகையில் விலக்ஷணமானதொரு செயலைச் செய்தாள். கர்ப்பிணிகள் இயற்கையாகவே மண்ணை ருசித்து சாப்பிடுவதுண்டு. இந்த நிலையை தேவகி அடைந்தாள். மேலும் தேவகி மண்ணையுண்டாள் என்றால் அதன் காரணத்தை ஊகித்துக் கொள்ளவேண்டும். (ஆதி வராஹாதிரூபேண தேவதாரூபா வா, ரகுநாதாதிரூபேண கோலகரூபா வா உப பக்தா) ஆதிவராகனாயிருந்து கையில் மண்ணை ஏந்தி வந்ததும், பண்டு ஆலிலையில் துயில்கொண்டபொழுது வயிற்றில் பூமியை வைத்திருந்தவனுமான பெருமான் என் வயிற்றில் பிறக்கப் போகிறான், ஆதலால் தான் மண்வாசனை தேவகியை ஈர்த்தது போலும்)

12. ஸமாதி ஸுக்ஷேத்ரக்ருஷீவலாநாம்

ஸந்தோஷ ஸஸ்யோதய மேககாந்த்யா


சகாஸ தஸ்யா ஸ்தந சூசுகாபா


கர்ப்பத்விஷா காடமிவாநுலிப்தா


ஸமாதி என்பது நல்ல நிலம். அதில் க்ருஷி செய்பவர்கள் யோகிகள். அவர்களுக்கு ஏற்படும் ஸந்தோஷம் என்கிற பயிருக்கு மேகம் போல் ஒளிபெற்றது கர்ப்பகாந்தி. அந்த காந்தியினால் ஓர் வகையான பூச்சைப் பெற்றதோ என்று சொல்லவல்லதாய் இருப்பது தேவகியின் ஸ்தனங்களின் நுனிபாகம்.மேகம் எவ்வளவு கறுத்திருக்கிறதோ அவ்வளவு ப்ரகாசம் உண்டு. அதே போல் ஸாலம்பந யோகத்தால் இந்த கர்ப்பகாந்தி மேகத்தை ஒத்து விளங்கியது.


13. கஸ்தூரிகா காம்ய ருசிஸ்ததீயா


ரம்யா பபௌ சூசுகரத்ந காந்தி:


தத்கர்ப்ப ஸந்தர்சந லோலுபாநாம்


அந்தர்த்ருசாம் அஞ்சநகல்பநேவ


ஒளிமயமான ஸ்லோகம். கஸ்தூரியே விரும்பவல்ல காந்தி என்று பொருள். கஸ்தூரியின் நிறம் கறுப்பு. கறுப்பின் அழகு வேறெதிலும் இல்லை. கறுப்புக்கு வேறு உதாரணம் கூறலாம். ஆனால் இங்கு இவ்வாறு கூறியதில் பல ரஸமுண்டு. கஸ்தூரி விலை உயர்ந்த வஸ்து. எம்பெருமான் திலகம் தரிப்பது கஸ்தூரியினால்தான். கஸ்தூரி திலகம் லலாடபாகே என்று கூறுவர். தேவகியின் முலைநுனி இந்திரநீலமணிகளின் காந்தி போன்று இருந்தது. கஸ்தூரியே அந்த காந்தியைப் பெற விரும்பியது போல இருந்தது. அவளது கர்ப்பத்தினால் ஏற்பட்ட நிலை அது. எம்பெருமானை சேவிக்கவேண்டும் என விரும்பியோர்க்கு அஞ்சனம் பூசியது போன்று அது திகழ்ந்தது.பூமியின் உள்ளிருக்கும் புதையலை காண நேத்ராஞ்சனம் இடுவது போல் அஞ்சன வண்ணனை காண வேண்டும் என்ற உள்நோக்கு உடையோர்க்கு மைப்பூச்சாக அமைந்ததோ!



14. பராவராணாம் ப்ரபவஸ்ய பும்ஸ:

ப்ரகாசகத்வம் ப்ரதிபத்யமாநாம்


அபாவயந் பாவித சேதஸஸ் தாம்


வித்யாமயீம் விஷ்வ பிதாமஹீஞ்ச


ரிபக்குவமான நிர்மலமான உயர்மதிநலம் படைத்த மஹான்கள் அண்ட சராசரங்களுக்கெல்லாம் காரணமான பரமபுருஷனை வெளிப்படுத்தும் சிறந்த நிலையில் உள்ள அத்தேவகியை வித்யையாகவும் விச்வங்களுக்கெல்லாம் பிதாமஹியாகவும் கண்டு கொண்டனர்.பகவான் இவ்வுலகத்திற்கெல்லாம் தந்தையாக விளங்குபவன். அவனுக்கே தாயென்றால் மற்றவர்களுக்கு பிதாமஹிதானே!


15. லிலேக விச்வாநி ஜகந்த்யபிக்ஞா


லீலாஹ்ருதே சித்ரபடே யதார்ஹம்


ப்ராய: ப்ரஜாநாம் பதய: ப்ரதீதா:


யந் மாத்ருகா: ஸ்வேஷு விதிஷ்வபூவந்


எல்லாம் நன்கே அறிந்து வைத்திருந்த தேவகி லீலைக்காக கொண்டு வரப்பட்ட சித்திரபடத்தில் ஓவியம் தீட்டவல்ல துணியில் உலகங்கள் அனைத்தையும் ஏற்றவாறு வரைந்தாள். ப்ரஜாபதிகள் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ருஷ்டிகர்த்தர்கள் இந்த சித்திரத்தையே மனதில் கொண்டு அமைந்தனரோ அல்லது தங்கள் தங்கள் செயல்களில் இவற்றையே மாத்ருகையாக கொண்டனரோ என்று சொல்லும் பாங்கில் அமைந்தது தேவகி தீட்டிய ஓவியம்.


16. நிராசிஷாம் பத்ததி மாததாநா

நைச்ரேயஸீம் நீதிம் உபக்நயந்தீ

புண்யாசயா பூர்வ யுகப்ரரோஹம்
இயேஷ தேவீ புவநே விதாதும்:

எதிலும் அபிலாஷை இல்லாத விரக்தர்களின் மார்க்கத்தை அடைந்தவளான தேவகி முக்திக்கு உபயோகமானதொரு நீதியை அடைந்தவளாயும், வெளியில் மனத்தைச் செலுத்தாத நிலையை பெறுகின்றவளாயும், நல்ல உள்ளம் படைத்தவளாயும் விளங்கினாள். உலகின் முந்தைய யுகத்தின்(க்ருதயுகம்) முளைத்தலாகிய தோற்றத்தை ஏற்படுத்த விளங்கினாள்.

17. அநாப்த பூர்வம் கிம் அபேக்ஷிதும் தே

கிம் வோபதத்யாம் அதவாதுநேதி

வயஸ்யயா பாவவிதா நுயுக்தா

ந கிஞ்சித் இத்யேவ ஜகாத நாதா

இதுவரை நீ அடைந்திராத ஏதாகிலும் வேண்டும் என்று நினைக்கின்றாயோ அல்லது இதுவரை நீ அநுபவித்ததில் உனக்கு மிகவும் பிடித்தமானது ஏதாகிலும் வேண்டுமா? என்ன வேண்டும் என்று சுவடறிந்த தோழி கேட்கின்றாள். ஒன்றும் வேண்டாம் என்று பதில் கூறினாள் தேவகி. அவள் நாதையன்றோ! அவளை வற்புறுத்த இயலுமோ?



18. அநாதரே தேவி ஸகீஜநாநாம்

கதம் ந தூயேத தயா தவேதி


உபஹ்வரே ஸல்லபிதா மநோக்ஞை:


ஆலோகதை: உத்தரம் ஆசசக்ஷே


தேவகியின் ஸகிகள் பலர்.அவளதுஅன்பிற்கு அடிமையானவர்கள். தேவகி தேவியாகின்றாள். அவளது அந்தஸ்து மிகப் பெரியது. அதைப் பெறும் பேறாக நினைப்பவர்கள் அவள் தோழிகள். அவர்களிடம் சுள்ளென்று ஒன்றும் வேண்டாம் என சொல்லலாமோ?அதனால் தோழிமார்களுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. தோழிமார்களை இவ்வாறு அநாதரம் செய்யலாமோ? அப்பொழுது அழகு ததும்பும் பார்வையால் அவள் பதிலளித்தாள். வாயினால் தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. கர்ப்பத்தின் வளர்ச்சியாலும் சரீரத்தின் தளர்ச்சியாலும் வாயால் சொல்லாமல், எனக்கு ஏன் தயையில்லை? என் வயிற்றில் இருப்பவன் தயைக்கு சொந்தக்காரன் ஆயிற்றே! அவனைச் சுமப்பவளான நானும் அதே போல் தயை செய்வேன் என்று அழகாக அவர்களைப் பார்த்தாள். இதுவே அவர்களுக்கு பேரின்பத்தை அளித்துவிட்டது.


19. அசேத ஸா காமம் அஜாத நித்ரா

மாதும் ப்ரவ்ருத்தேவ பதாநி சக்ரே

அத்யாஸ்த லோகாந் அவதீரயந்தி

பத்ராஸநம் பாவிதபாரமேஷ்ட்யா


இந்த ஸ்லோகத்தில் கர்ப்பிணிகளின் அவஸ்தைகளை விவரிக்கிறார். மூன்று அவஸ்தைகள். சயனம், கமநம், ஆசநம் முதலியன. கமநம் என்பதற்கு விருப்பம் போல் என்று பொருள். தூக்கமேயில்லாத தேவகி எப்பொழுதும் சயனித்து இருந்தாள். சில சமயங்கள் மெள்ள மெள்ள அடிமேல் அடிவைத்து நடந்தாள். யாருமே அவளுக்கு லக்ஷியத்தில் இல்லை. யாரையும் மதிக்கவில்லை. எங்கு தோன்றுகிறதோ அங்கு உட்காரலானாள். உலகை நடத்தும் பெரிய ராணி மாதிரியே உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்தாள். இவையெல்லாம் கர்ப்பவதிகளின் அவஸ்தைகள்.

20. பரிக்ரம ப்ரேக்ஷித பாஷிதாத்யை:

அந்யாத்ருசை: ஆப்தவிபாவநீயை:

மதோபபந்நா மதலாலஸா வா

ஜிதச்ரமாவேதி ஜநை: சசங்கே


சுற்றிச் சுற்றி வருதல், கூர்ந்து கூர்ந்து பார்த்தல், கச்சிதமாகப் பேசுவது முதலான செயல்கள் விலக்ஷணமாய் இருந்தன. இதைக் கண்ட மற்றவர்கள் பலவாறு எண்ணத் தொடங்கினர். இவளுக்கு மதம் ஏற்பட்டுவிட்டதோ, அல்லது ச்ரமம் தெரியாமல் இருக்க மத்யபானம் பண்ணியிருப்பாளோ! மதலாலஸையோ! அல்லது ச்ரமத்தை வென்றிருப்பாளோ? (லாலஸா- கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பெரிய ஆசை உத்சாகம் எனக் கொள்ளலாம்).


21. சேஷே சயாநாம் கருடேந யாந்திம்

பத்மே நிஷண்ணாமதிரத்நபீடம்

ஹயாநநை: ஆச்ரிதவந்தி க்ருத்யாம்

ஸ்வாம் ஆக்ருதிம் ஸ்வப்ந த்ருசா ததர்ச

இதற்கு முன் ஸ்லோகத்தில் தூக்கமே இல்லாமல் சயனித்திருந்தாள். இப்போதோ ஆதிசேஷனில் சயனித்திருப்பதாகவும், கருடனுடன் செல்வதாகவும் ரத்ன சிம்ஹாசனங்களில் தாமரை மலரில் அமர்ந்திருப்பதாகவும் கின்னரர்களால் துதிக்கப்படுவதாகவும் தனது உருவம் இருப்பதாக கனவு கண்டாள். எப்பெருமானைத் தவிர வேறு எவரையும் சுமக்காத கருடன் தன்னைச் சுமப்பதாக தேவகி கனவு கண்டாள். உள்ளே இருக்கும் எம்பெருமானுக்கேயுரிய வாஹந கமநாசன ஸுகத்தை தமக்கே அமைந்துவிட்டதை உணர்ந்தாள்.


22. அந்த ஸ்திதம் யஸ்ய விபோ: அசேஷம்

ஜகந்நிவாஸம் தததீ தமந்த:

ததாத்மநோ விச்வம் அபச்யதந்த:

தர்காதிகம் தாத்ருசம் அத்புதம் ந:








எந்த எம்பெருமானின் உள்ளே அசேஷமான உலகமும் அமைந்துள்ளதோ அததகையவனை தன்னுள்ளே தரிக்கின்றாள் தேவகி. அந்த க்ருஷ்ணனின் வயிற்றில் இருக்கும் ப்ரபஞ்சத்தை தன்னுடைய வயிற்றில் கண்டாள். இது எப்படி பொருந்தும்? இது நமது தர்க்கத்திற்கும் விஞ்சிவிட்ட அத்புதம் என்று தான் சொல்லவேண்டும்.


23. ஸுராஸுராதீச்வர மௌளிகாதாத்

விசீர்ண ஜாம்பூநத வேத்ர ச்ருங்கம்

ஆலக்ஷ்ய ஸந்தோஷம் அலக்ஷ்யமந்யை:

அநீகநேதாரம் அவைக்ஷதாராத்.

விஷ்வக்ஸேநர் தன் அருகில் இருப்பதைக் கண்டாள். அவரும் எம்பெருமானை ஸேவிக்க திரண்டுவந்து மேலே விழும் தன்மையுடைய தேவர்களின் தலைவர்களையும், அஸுரர்களின் தலைவர்களையும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக பிரம்பினால் கிரீடங்களில் அடிப்பார். அவ்வாறு அடிப்பதாலேயே அவர் கையில் இருந்த பிரம்பின் பொன்நுனி சிதறி இருக்கிறது. அடிபட்டவர்கள் அழவில்லை. அழியவில்லை. ஆனால் எங்கும் சந்தோஷம் தான் தென்படுகிறது. இவரை பிறரால் காணமுடியாது. இவர்தானே ஸேநாபதி. இத்தகைய விஷ்வக்சேனரை தன் அருகில் கண்டாள்.


24. த்ரிலோக மாங்கல்ய நிதேஸ் த்ரிவேத்யா:


ஸஞ்சீவநீம் வாசம் உதீரயந்தி


நியோக யோக்யாந் அநக ப்ரஸாதா


நாகௌகஸாம் நாமபி: ஆஜுஹாவ


மூன்று உலகங்களுக்கும் உயிர்ப்பிக்கவல்ல மூன்று வேதங்களுக்கும் நிதிபோல் அமைந்ததான வகையில் பேசுகின்றாள் தேவகி. அங்கு தனது பரிஜனங்களை அனுக்ரஹிப்பவளாய் தேவலோக வாஸிகளின் பெயர்களைக் கொண்டே அழைக்கலானாள். இவர்கள் பெயர் மறந்துவிட்டதா? இவர்களை பெருமையுடன் அழைக்கிறாளா! செல்லமாய் அழைக்கிறாளா? குழப்பத்தினால் அழைக்கிறாளா? அல்லது தனது பரிஜனங்களுக்கு அந்த அந்த அந்தஸ்தை அளிக்க அழைக்கின்றாளோ என்ற கேள்விகள் எழுகின்றன.


25.யத்ருச்சயா யாதவ தர்மபத்நீ


யாமாஹ தர்மேஷூ பராவரேஷு


அத்ருஷ்ட பூர்வாபரயாபி வாசா


ப்ரதிச்ருதா நூநம் அபாவி தஸ்யா:


முன் ஸ்லோகத்தில் வேதங்களையும் இவளுடைய வார்த்தை உயிர் பெறச் செய்கின்றது என்றார்.இதில் இவள் வார்த்தைகளை வேதங்கள் ப்ரதித்வனிக்கின்றன என்கிறார். யாதவ தர்மபத்நியான தேவகி தனக்குத் தோன்றியபடி சிறியதும், பெரியதுமான தர்மங்களில் என்னென்ன சொன்னாளோ அதெல்லாம் வேதவாக்கியம் எதிரொலிப்பது போலவே இருந்தது.


26. க்ரியாம் உபாதித்ஸத விச்வகுப்த்யா


க்ருதாபராதேபி க்ருபாம் அகார்ஷீத்


முநீந்த்ரவ்ருத்யா முகரீபவந்தீ


முக்திக்ஷமாம் வக்தும் இயேஷ வித்யாம்


உலகரக்ஷணத்திற்குஏற்றதையே செய்ய நினைத்தாள்.தவறு செய்தவரிடத்தும் க்ருபை பண்ணினாள். வேதாந்த விசாரமுடையவளாய் ஏதோ சொல்பவளாய் முக்திக்கு ஏற்றதான வித்யையை சொல்ல விரும்பினாள். இதற்கு முன் ஸ்லோகங்களில் வேதத்ரய ஸஞ்சீவனமான வாக்கு என்றவர் இதில் உபநிஷத் ரூபமாய் அவள் வாக்கு அமைந்தது என்று கூறுகிறார்.


27. ஸதாம் சதுர்வர்கபல ப்ரஸூதௌ


நாராயணே கர்ப்பகதே நதாங்கீ


அபங்குராம் உந்நதிம் ஆச்ரயந்தீ


ஸர்வஸ்ய ஸாதித்ஸத ஸர்வம் ஏகா


நல்லோர்க்கு நான்குவிதமான புருஷார்த்தங்களையும் நல்குமவனான நாராயணன் கர்ப்பத்தில் நேர்த்தியாய் எழுந்தருளிவிட்டபடியால் நதாங்கியாய் ஸ்தனபாரத்தால் குனிந்து வணங்கின அங்கமுடையவளாய் இருந்தாள். அவள் உடல் வணங்கியதேயன்றி உள்ளத்தில் சிதறாத உயர்வினைப் பெற்றுவிட்டாள். தான் ஒருத்தியே எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிக்க விருப்பங்கொண்டாள்.


28. க்ருசோதரீ கார்ச்யம் அதீத்ய காலே


கேநாபி தாம்நா க்ருத வ்ருத்தியோகா


பராம் அபிக்யாம் க்ரமச: ப்ரபேதே


தாராபிநந்த்யா தநுரைந்தவீவ


இயற்கையாகவே மெல்லிய மேனியுடையவள். இடையும் அப்படியே. கர்ப்பம் வளர வளர மெல்லியநிலை மாறிவிட்டது. ஏதோ ஒரு தேஜோ விஷேசத்தினால் நாளுக்கு நாள் வ்ருத்தியாகிக் கொண்டு இருக்கிறது. நாளடைவில் உயர்ந்த அழகினைப் பெற்று பொலிவுடன் விளங்குகின்றாள். இவளது மேனி தாரை கொண்டாடும் சந்திரனின் மேனி போலன்றோ இருக்கின்றது. இங்கு தாரா என்பது கண்ணில் உள்ள தாரை என்று பொருள். எந்த கண் தான் இவளது திருமேனியை பார்த்து மகிழாது. பல நக்ஷத்ரங்கள் இருந்தாலும் ஒரு சந்திரபிம்ப சோபை ஏற்படுமோ! நக்ஷத்திரங்களால் கொண்டாடப்பெற்றது எனவும் சொல்லலாம். அவனாலும் அபிநந்தனம் பண்ணப்படும் மேனிப்பொலிவு எனவும் சொல்லலாம்.


29. நிகூடம் அந்தர்தததா நிவிஷ்டம்


பத்மாபரிஷ்காரமணிம் ப்ரபூதம்


மத்யேந தஸ்யா: ப்ரசிதேந காலே


மஞ்ஜூஷயா ரூப்யபுவா பபூவே


ள்ளே மறைந்ததாய் இருப்பதும் உன்னதமானதும் லக்ஷ்மிக்கு அணிகலனான ரத்னம் போன்று இருப்பதுமான பெருமானை தரிக்கின்றது தேவகியின் இடை. அதுவும் காலத்தோடு புஷ்டமாய் வளர்ந்துள்ளது. அவ்விடை வெள்ளிப்பேழையோ என்னலாம்படி அமைந்துள்ளது. எம்பெருமானை மணியாக நிரூபணம் பண்ணுவது ஸர்வஸம்மதம். பொன்னை மாமணியை என்றும், சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய என்பதும், பச்சை மாமலை போல் மேனி என்பதும் மாணிக்கமே என் மணியே என்றும் கருமாணிக்கமே என்றும் பலவிதமாக ஆழ்வார்கள் அனுபவித்துள்ளனர். மஞ்சூஷிகா மரகதம் பரிசிந்வதாம் த்வாம் என்கிறார் வரதராஜ பஞ்சாசத்தில். வரைமேல் மரகதமே என்கிறார். இங்கு தேவகியின் இடையை உபநிஷத் சாம்யத்தினைப் பெறுகிறது. ஸாலக்ராமங்களை வெள்ளி கோயிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணுவது போல் அவளின் இடையில் (ரூப்யம்- வெள்ளி-அழகு)பெருமான் எழுந்தருளப் பண்ணுகிறார்.


30. ஸநை: ஸநைஸ்தாம் உபசீயமாநாம்


தர்சாந்த தீப்தாமிவ சந்த்ரலேகாம்


அந்தஸ்த்த க்ருஷ்ணாம் அவலோகயந்த:


சக்ருஸ் சகோராயிதம் ஆத்மநேத்ரை:


அமாவாஸ்யை கழிந்தபிறகு சந்திரனின் கலை ஒளி பெற்று மெள்ள மெள்ள வளர்ச்சியடையும். வளர வளர சந்திரனின் கலைகளில் கறுப்பு நிறம் தெரியும். அம்மாதிரி வளர்ச்சியடைந்துவரும் தேவகியை சகோர பக்ஷிகள் போல் தங்கள் கண்களால் கண்டனர்.க்ருஷ்ணாம் என்பது சந்திரனின் காணப்படும் கறுப்பு நிறம். க்ருஷ்ணம்ருகம் என்றும் கூறுவர். உள்ளே இருப்பவன் கண்ணன். இந்த ரஹஸ்யத்தை தெரிந்து கொண்டனர் போலும். சந்திரனின் கிரணத்தினை நுகர்வது போல் தேவர்கள் க்ருஷ்ணாம்ருதத்தை உண்டனர்


31. மயி ஸ்திதே விச்வகுரௌ மஹீயாந்


மாபூத் புவோ பார இதீவ மத்வா


ஸகீஜநாநாம் அவலம்ப்ய ஹஸ்தாந்


ஸஞ்சாரலீலாம் சநகைஸ் சகார


அவன் பெருமான், விஸ்வகுரு என்னிடம் வஸிக்கிறான். அவன் அவனையும் என்னையும் தாங்கவேண்டுமானால் பூமிக்கு எவ்வளவு பாரம் அதிகமாகும் என்று எண்ணுவாள் போல் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல சஞ்சாரம் செய்தாள். இதுவும் ஒரு லீலையன்றோ!


32. முகுந்த கர்ப்பா முகுரேஷு தேவீ


நாபச்யத் ஆத்மாநம் அவாப்தபூஷா


நாதத்விஷா நந்தக தர்பணேந


அதித்ருக்ஷதாத்மாநம் அத்ருச்யம் அந்யை: முகுந்தனை கர்ப்பத்தில் கொண்டுள்ள தேவகி நன்கு ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்று தன்னை கண்ணாடிகளில் காணவில்லை. பெண்டிர் தம்மை நன்கு அலங்கரித்து அதுவும் இது போன்ற கர்ப்ப நிலையில் ஆபரணம் பூண்ட பெண்டிர் தங்களைக் கண்ணாடியில் பார்ப்பது இயல்பு. ஆனால் அவளோ முகுந்தனையே தன் ஆபரணமாக தரித்துள்ளவள். அவள் பல ஆபரணங்கள் அணிந்திருந்தும் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் முகுந்தனை தரித்துள்ளதால் அவள் தன்னைப் பார்க்க விரும்பினாள்.ஆகவே நாதனின் ஒளியான அவனுடைய வாள் என்ற கண்ணாடியின் மூலமாக தன்னைக் காண விரும்பினாள். நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம் கட்கம் என்பர். ப்ரதீப்தம் என்றால் அது கண்ணாடி போல் பளபளக்கும். கண்ணனையே ஒளியாகக் கொண்ட நந்தகத்தில் பார்த்தால் கண்ணனையும் பார்க்கலாம் என எண்ணினாள் போலும்.


33. ஸ்ரஜ: ப்ரபூதா ந ச(ஷ)ஷாக வோடும்


தூரே கதா ரத்நவிபூஷணாநாம்


பவிஷ்யதி க்ஷோணி பராபநோதே


ப்ரத்யாயநம் ப்ராதமிகம் ததாஸீத்


முதல் ஸ்லோகத்தில் ஆபரணங்களை அணியவில்லை என்றார். இதில் ஆபரணங்களைக் காட்டிலும் மெல்லியதான மாலைகளை கூட அணிய இயலாதவளாக ஆகிவிட்டாள். பண்டைய நாட்களில் மாலைகளை அணிந்து சஞ்சரிப்பது வழக்கம். கர்ப்பபாரம் தவிர்க்க முடியாது. மாலைகளின் பாரம் வேறு வேண்டுமா? இது எவ்வாறு இருக்கின்றது எனில் பிறக்கப்போகும் மகனால் பூமியின் பாரம் குறையப் போகிறது. அதை முன்கூட்டியே உறுதிப் படுத்தும் அடையாளமாக இருந்தது என்பதாம்.


34 திவௌகஸோ தேவக வம்சலக்ஷ்மீம்


விலோக்ய தாம் லோகநிதாந கர்ப்பாம்


விபூதிம் அக்ரேஸர வேதவாதா:


வ்யாசக்யுரஸ்யா விவிதப்ரகாராம்


தேவதேவன் கர்ப்பத்தில் எழுந்தருளிவிட்டான். இதை உணர்ந்த தேவர்கள் தேவக வம்சத்தின் லக்ஷ்மியெனத் திகழ்ந்த தேவகியை உலகங்களின் ஆதிகாரணமான வஸ்துவை கர்ப்பத்தில் கொண்டிருப்பதைக் கண்டு வேத வாக்கியங்களை முன்மொழிபவர்களாய பலவகையான இவளுடைய வைபவத்தை துதிக்கலாயினர்.


35. பதி: ஸஸத்வாமபி தத்ப்ரபாவாத்


அதுக்கசீ(sh)லாம் ஸமயே பவித்ரீம்


ஸுகைகதாநாம் அவலோக்ய தேவீம்


ஸ்வஸம்பதம் ஸூசயதீதி மேநே


இதுவரை தேவகியின் கர்ப்பலக்ஷண ப்ரபாவங்கள் கூறப்பட்டன. இதில் பூரண கர்ப்பிணியாய் ப்ரஸவகாலம் நெருங்கும் சமயத்தில் தேவகியின் மநோநிலையும் அப்போது வஸுதேவரின் மனோநிலையும் எப்படி இருந்தன என்று கூறுகிறார். தேவகியின் பதியான வஸுதேவர் பூரண கர்ப்பிணியாயிருந்தும் அந்த கர்ப்பத்தின் ப்ரபாவத்தினால் எந்த விதமான ச்ரமமோ துக்கமோ இல்லாமல் இருந்து ப்ரஸவ சமயத்தில் ஸுகமாக இருப்பாள் என்றும் கண்டு தனது பவித்திரமான செல்வத்தை அது காண்பிப்பதாக உணர்ந்தார்.


36. பித்ருத்வம் ஆஸாத்ய ஸுராஸுராணாம்


பிதாமஹத்வம் ப்ரதிபத்ஸ்யமாத:


அநந்த கர்ப்பாம் அவலோக்ய தேவீம்


அதுஷ்யத் அந்யேஷு கதாபிலாஷ: முன்னம் கச்யபராக இருந்தவர் இப்பொழுது வஸுதேவர். திதி, அதிதி மூலம் அவர்களுக்கு பிறந்தவர்கள் தேவர்களும் அசுரர்களும். பகவான் உபேந்திரனாக அவதரித்ததும் கச்யபருக்குத்தான். வாமனனுக்கோ, த்ரிவிக்ரமனுக்கோ க்ருஹஸ்த தர்மமோ, சந்ததியோ சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் கண்ணன் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. முன்பு அவர் தேவர்களுக்கு பிதாவாக இருந்தார். இப்போது பிதாமஹத்வம் பெற்றுவிட்டார். அனந்தனை கர்ப்பத்தில் கொண்ட தனது தேவியை பார்த்து வேறு எதிலும் அபிலாஷை இல்லாதவராய் அகமகிழ்ந்தார் வஸுதேவர்.


37. தாபோபசாந்திம் ஜகதாம் திசந்தீ


ஸந்த்யாபரா ஸாதுஜந ப்ரதீக்ஷ்யாம்


தாம் ஈத்ருஷீம் விச்வபிது: ப்ரஸூதிம்


ஸம்வேதயந்தீவ ஸமாஜகாம


இதுவரை தேவகியின் கர்ப்பலக்ஷணங்களை தெரிவித்தார். இனி சாயங்காலம் தொடக்கமாக நள்ளிரவு வரையிலான வர்ணனங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன. உலகங்களின் தாபத்திற்கு சாந்தியை அளிப்பதான, ஸாது ஜனங்களால் எதிர்பார்க்கப்படுவதாய் உள்ள மாலைவேளை விச்வபிதாவின் இத்தகைய அவதாரத்தினைக் காண்பிப்பது போல வந்து சேர்ந்தது.


38. ஸுவர்ண பீதாம்பர வாஸிநீ ஸா


ஸ்வதாம ஸஞ்ச்சாதித ஸூர்யதீப்தி:


உபாஸநீயா ஜகதாம் பபாஸே


முரத்விஷோ மூர்த்திரிவ த்விதீயா முந்திய ஸ்லோகத்தில் ஸாயம் ஸ்ந்த்யையின் வருகையை வர்ணித்தார். இதில் ஸ்ந்த்யா என்பவளைப் பெண்ணாகவே அழகான முறையில் வர்ணிக்கிறார். அழகான பீதாம்பரத்தை அணிந்திருக்கிறாள். மனோஹரமான ஸுவர்ணத்தோடு கூடியதான (அந்தி போல் நிறத்தாடை) பட்டுப்புடவை எனக் கொள்ளலாம். ஸந்த்யா ப்ரகாசத்திலே சூரியப்ரகாசம் மறைவது இயற்கை. தனது ப்ரகாசத்தினால் ஸூரியனுடைய ஒளியை மறைப்பவளாய் முரன் என்ற அசுரனைக் கொன்ற பகவானின் இரண்டாவது உருவமோ என்னும் வகையில் அமைந்தவளாய் உலகங்களுக்கு உபாஸிக்க வேண்டியவளாகி விட்டாள். ( இன்னும் பெருமான் அவதரிக்கவில்லை. எப்படி இருப்பான் என தெரியாது) அதனால் ஸந்த்யையே இரண்டாவது ரூபமாக இருந்தாள் என்கிறார்.


39. ப்ரஸக்தபாதஸ் சரமாம்புராசௌ


ரக்தோருபிம்போ ரவி: அஸ்தசைலாத்


திநாந்த நாகேந த்ருடப்ரணுந்நம்


மநஸ்ஸிலா(manashshila) ச்ருங்கமிவாபபாஸே


சூரியன் மாலையில் அஸ்தமன மலையில் இருந்து மேற்கு கடலில் சிவந்த பெரிய உருவத்துடன் விழத்தொடங்கினான். பகலின் முடிவு- மாலை என்றொரு யானையினால் வேகமாக எறியப்பட்ட மநஸ்ஸிலா ச்ருங்கம் போலிருந்தது என்கிறார். ( மநஸ்ஸிலா அல்லது மனshஸிலா - மலையில் ஒரு விதமான தாதுப்பொருள் உண்டு. அது சிவந்த நிறத்தில் இருக்கும். பெரிய பெரிய குன்றுகளாக இருக்கும். மாலையை யானை என வர்ணிக்கிறார். கறுப்பு நிறம். மலைச்சிகரத்தையே வீழ்த்தும் யானை என்று வர்ணிக்கிறார் காளிதாசன். அத்தகையதைப் போன்ற மாலையானது ப்ரகாசத்தின் அதிபதியான சூரியனை திடமாக எழுந்திருக்க முடியாமல் தள்ளியது என்கிறார். ஆஹா! ஆஹா!


40. நிமஜ்ஜதா வாரிநிதௌ ஸவித்ரா


கோ நாம ஜாயேத கரக்ரஹீதா


ததேதி ஸம்பாவநயைவ நூநம்


தூராத் உதக்ஷேபி கராக்ரம் உச்சை:


பெருங்கடலில் சூரியன் மூழ்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் ஆகாயத்தில்அவனுடைய கிரணங்கள் தெரிவிக்கப்பட்டன.தனக்கு யாராவது கை கொடுத்து தூக்கிவிடமாட்டார்களா என்று எண்ணி தனது கைகளை வெகுதூரம் வரை மேல் நீட்டுகிறான் போலும்.


41. ஸ்ப்புரத் ப்ரபா கேஸரம் அர்கபிம்பம்


மமஜ்ஜ ஸிந்தௌ மகரந்ததாம்ரம்


ஸந்த்யாகுமார்யா ககநாம்புராசே:


க்ரீடாஹ்ருதம் க்ஷிப்தமிவாரவிந்தம்


கேஸரங்கள் பூவின் தாதுக்கள். அவைபோல் விளங்குகின்ற ஒளியுடைய சூரியபிம்பம். அது தாமரைமலர் போல் சிவந்த நிறமுடையது. அது கடலில் மூழ்கிவிட்டது. ஸந்த்யை என்ற சிறுமி ஆகாயம் என்ற கடலிலிருந்து விளையாட்டாகப் பறித்து எறிந்துவிட்ட தாமரைப்பூப்போலே ஆயிற்று. இது ஒரு அத்புதமான ஸ்லோகம்.ஸந்த்யா காலத்தினைக் குமாரியாகவும், சூரியனைத் தாமரைப்பூவாகவும் ஆகாயத்தைக் கடலாகவும் நிரூபணம் செய்வது ஸ்வாமியின் தனிப்பாங்கு. சூரியன் மறைந்தால் தாமரைப்பூ மூடிக் கொள்ளும்.சூரியனே தாமரைப்பூவானால் மூழ்குவது என்ற நிலையாம். முந்தைய ஸ்லோகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிற என்றும் இதில் மூழ்கிவிட்டது என்றும் தெரிவித்ததை கவனிக்க வேண்டும்.


42. பணாமணிப்ரேக்ஷ்ய கராம்சுபிம்ப:


ஸந்த்யா ஸுபர்ணிம் அவலோக்ய பீத:


தாபாதிகோ வாஸரபந்நகேந்த்ர:


ப்ராயேண பாதாள பிலம் விவேச


பகல் என்கிற பெரியதொரு பாம்பு தாபம் அதிகமாகி தனது தலையில் உள்ள மணியினால் கதிரவனோ என பயந்து ஸந்த்யை என்ற கருடபக்ஷியின் தாயைக் கண்டு நடுங்கி பாதாளம் என்ற பொந்தில் புகுந்துவிட்டது போல் ஆயிற்று. ஸந்த்யா காலத்தை ஸுபர்ணீம் என்கிறார். ஆகவே பெண்பாலாக வர்ணித்துவிட்டமையால் கருடனுடைய தாய் என்கிறார். சூரியன் மூழ்கும்போது அவனுடைய உருவம் தலைபோல் இருக்கும். உடனே இருட்டிவிடும். இதை அழகாக விவரிக்கிறார் ஸ்வாமி. அதிகமான தாபத்தை உடையது பகல். அதை போக்கவேண்டுமே. விஷத்தை அதிகமாக பெற்றிருப்பதால் கொதிப்பு அதிகம் உடையது பாம்பு. (வாஸரம் - பகல்). வாஸர என்பது பாம்பின் வகை. (பந்நகம், வாஸர போன்ற பாம்புகள் ஜனமேஜயனின் யாகத்தில் வந்து விழுந்ததாக பாரதம் குறிப்பிடுகிறது. ஆகவே தாபத்தை தணித்துக் கொள்ள பாதாளத்தில் ஒளிந்துவிட்டதாக கூறுகிறார்.


43. ப்ரதோஷராகாருண ஸூர்யலோகாத்


திசாகஜோ த்ருப்த இவாதிகோர:


காலோபநீதம் மதுநா ஸமேதம்


அபுங்க்த மந்யே கபலம் பயோதி:









மாலை வேளை-சிவந்த நிறம். அப்பொழுது கதிரவன் கடலில் மூழ்கி மறைகின்றான். இதை வர்ணிக்கிறார். கடல் என்கிற ஒரு பெரிய மதம் தோய்ந்த திக்கஜமொன்று காலம் கொடுத்த தேனில் தோய்ந்த கவளம் போலே சூரியனை விழுங்கிவிட்டது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படியாக மாலை வேளையை வர்ணிக்கிறார். கதிரவன் கடலில் மூழ்கும் நிலையை வர்ணிக்கிறார். அதிகோரமானதும் மதம் பிடித்ததுமான திக்கஜம் என்கிறார். மாலையானதால் மேற்குத் திக்கில் இருக்கும் யானைக்கு அஞ்சனம் என்று பெயர். (கிழக்கில் ஐராவதம்). அஞ்சனம் கறுப்பு நிறம். உருவத்தாலும் செயலாலும் கொடூரமானது. மேலும் காலோபநீதம் மதுநா என்கிறார். மது சிகப்பாயிருக்கும். சூரியனும் சிவப்பு. திக்கோ வாருணீ. யானையோ அஞ்சனம். ஆகவே கடல் கபலத்தை விழுங்கிவிட்டது என்று பொருளாகும்.


44. ததா தம: ப்ரோஷித சந்த்ரஸூர்யே


தோஷாமுகே தூஷித ஸர்வ நேத்ரம்


வியோகிநாம் சோகமயஸ்ய வந்ஹே:


ஆசாகதோ தூம இவாந்வபாவி


அந்த சமயத்தில் சூரியனும் இல்லை. சந்திரனும் இல்லை. இரவு தொடங்குகிறது. தோஷாமுகம் என்பது இரவின் தொடக்கம். எல்லோருடைய கண்களையும் மறைப்பது தோஷாமுகத்தின் ப்ரபாவம். வஸ்துக்களும் உள்ளன. கண்களும் உள்ளன. ஆனால் அக்கண்களால் வஸ்துக்களைக் காண இயலவில்லை. இருள் சூழ்ந்து கொண்டது. தம்பதிகள் அல்லது காதலர்கள் காலவசத்தால் பிரிந்து இருக்கின்றனர். அவர்களுடைய சோகம் பெருகி பாதிக்கிறது. சோகம் பெருகி நெருப்பு போல் எரிகிறது. வெளியில் ஜ்வாலை படராத நெருப்பு என கவி வர்ணிக்கிறார். வெளியில் தெரிந்தால் தணிக்கலாம். ஆனால் அது வெளிக் கிளம்புமா? உள்ளேயே புகைக்க ஆரம்பித்துவிட்டது. புகையே இருள். இரவு தொடக்கமாதலால் இரண்டு எதிர் திக்குகளில் கிளம்பின சோகப்புகையே எங்கும் பரவிவிட்டதோ என்னலாம்படியுள்ளது.


45. ஸதாரபுஷ்பா த்ருதபல்லவஸ்ரீ:


ப்ரச்சாய நீரந்த்ரதம: ப்ரதாநா


விச்வாபிநந்த்யா வவ்ருதே ததாநீம்


வைஹாயஸீ காபி வஸந்த வந்யா




முன் ஸ்லோகத்தில் இருள் பரவியதைக் கூறினார். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நக்ஷத்திரங்கள் தோன்றுவது முதலான அழகினை வர்ணிக்கிறார். ஸந்த்யையின் ஒளியினால் சிவப்பு நிறமும் கறுத்தும் இருக்கும் தளிரின் ஒளி போன்ற ஆகாயம். அது ஒரு வனம் போல விலக்ஷணமான வசந்தவன சோபையுடன் திகழ்கிறது. அதில் நக்ஷத்திரங்கள் பூக்கள் போல திகழ்கிறது. வனத்தின் சோபையை வானத்திலிருந்துதான் பார்க்க இயலும். ஆனால் வானத்தின் வனசோபையை இங்கிருந்தே நாம் அனுபவிக்கலாம்.


46. அலக்ஷ்யத ச்யாமலம் அந்தரிக்ஷம்


தாராபிர் ஆதர்சித மௌக்திகௌகம்


நிவத்ஸ்யதோ விச்வபதேர் அவந்யாம்


காலேந ப்ருத்யேந க்ருதம் விதாநம்


வானம் கறுத்து காணப்பெற்றது.கறுநிறமுள்ள ஆகாயம் விதானமாக காட்சியளித்தது.அங்கு முத்துக்களைக் குவித்தது போல் நக்ஷத்திரங்கள் காட்சியளிக்கின்றன.விதானத்தில் மேற்பரப்பில் அழகான முத்துக்களை அமைப்பது உண்டு.இங்கு காலம் என்ற பணியாள் வானத்தையே விதானமாக்கி முத்துப்பந்தல் அமைக்கிறது! ப்ரபு வருவதற்கு முன்னம்தான் பந்தல் போடுவது,விதானம் கட்டுவது வழக்கம். இங்கு பூமியில் வாசம் செய்ய விச்வபதி வருகிறான். பூமியில் வசிக்கப் போவதால் வானமே விதாநம் ஆயிற்று.


47. அப்ருங்கநாத ப்ரதிபந்ந மௌநா


நிமேஷபாஜோ நியதம் வநஸ்த்தா:


தூரம் கதே ஸ்வாமிநி புஷ்கரிண்ய:


தத்ப்ராப்தி லாபாய தபோ விதேநு:


சூரியன் மறைந்ததும் இயற்கையாகவே தாமரை மலர்கள் வாய் கூம்பும். மலர்கள் மூடிவிட்டதால் வண்டுகள் முரலாமல் அடங்கிவிட்டன. இனி நாதம் இல்லை. மௌனம் முனிவரின் செயல். தவம் புரிவோர் கண்களை மூடிக் கொண்டு இருப்பர்.அசைவில்லாமல் இருப்பர்.சிலர் நீரில் நின்றும் அசைவற்று இருப்பர்.அதே போல் தனது கணவனான சூரியன் வெகுதூரம் சென்றுவிட்டபடியால் தாமரையானது தவக்கோலத்தில் இருக்கிறதாம். தாமரைக்கும் சூரியனுக்கும் பதி-பத்னி பாவம். ஸ்வாமி எங்கோ சென்றுவிட்டார். அவரை அடைய கடுந்தவம் புரிந்துதான் ஆகவேண்டும். (சுத்தமான தீர்த்தத்தை புஷ்கரிணி என்பார்கள். தூயமையும் தவமும் கொண்ட படியால் தாமரை ஓடைகளை ஸ்வாமி புஷ்கரிணி என்பார்கள். )


48. நிமீலிதாநாம் கமலோத்பலாநாம்


நிஷ்பந்த ஸக்யைரிவ சக்ரவாகை:


விமுக்த போகைர் விததே விஷண்ணை:


விபோத வேலாவதிகோ விலாப:


தாமரை மலர்களும் கருநெய்தல்களும் கண்களை மூடிக்கொண்டுவிட்டன. இரவில் கருநெய்தல் மலரத்தானே வேண்டும். ஆனாலும் மலரவில்லை. இதைக்கண்டு சக்ரவாக பக்ஷிகள் தமக்குள்ளே பிரிந்து அழுகின்றன.இரவில் சக்ரவாகம் பிரிந்தே இருக்கும். விடியும்வரை அவை வாய்விட்டு அழுதவண்ணம் இருக்கும். இதன் காரணம் வேறாயிருந்தும் ஸ்வாமி அழகான கவிமரபால் விளக்குகிறார். தாமரை மலரும் கருநெய்தல் மலரும் பதியைப் பிரிந்த துக்கத்தில் கண்மூடிக்கிடக்கின்றனவே,தாம் மட்டும் போகத்தை அனுபவிக்கலாகது என்றெண்ணி அவை உயிர் பெற்று எழவேண்டும் என்று வாய் ஓயாமல் கூவுகின்றன போலும்.


49. தமிஸ்ர நீலாம்பர ஸம்வ்ருதாங்கீ


ச்யாமா பபௌ கிஞ்சித் அதீத்ய ஸந்த்யாம்


ப்ராசீநசைலே ஸமயாந் நிகூடம்


ஸமுத்யதா சந்த்ர மிவாபிஸர்தும்








இருளாகிற கறுப்பு சேலை அணிந்து அதனால் தன்னைப் போர்த்திக் கொண்டு ச்யாமா(நல்ல வயதுடைய பருவப் பெண்) ஸந்த்யா காலம் கழிந்ததும் தன் ஆசைநாயகன் கிழக்குமலையில் ஒளிந்திருக்க அவனிடம் காதல் கொண்டு குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் அபிஸாரிகையை போல் சந்திரனை அணுக முயற்சி செய்தாள். (கிழக்கு மலையில் ஒளிந்திருப்பவன் சந்திரன். அஷ்டமியாதலால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னேதான் தோன்றுவான்.)


50 . நிசாகரேண ப்ரதிபந்நஸத்வா


நிக்ஷிப்ததேஹேவ பயோதிதல்பே .


ஜகத் ஸமீக்ஷ்யா ஜஹதீச கார்ச்யம்


ப்ராசீ திசா பாண்டரதாம் அயாசீத்


சந்திரனோடு சேர்ந்துவிட்டாள் ஒரு பெண். பும்யோகம் ஏற்பட்டால் கர்ப்பம் தரிக்க நேரமாகுமோ!கடலெனும் படுக்கையில் கிடக்கிறாள் போலே இருக்கிறாள்.சந்த்ரோதயம்ஆகப் போகிறது.அதனால் தனது க்ருசத்தன்மையை விட்டுவிட்டு உலகமெலாம் காணத்தகுந்தவளாய் ஆகப் போகிறாள். எவ்வளவு உடல் வெளுத்துவிட்டது. அது வேறு யாரும் இல்லையாம். கிழக்கு திக்கு என்பதேயாம்.


51. தம:ப்ரஸங்கேந விமுச்யமாநா


கௌரப்ரபா கோத்ரபிதாபி நந்தயா


விதூதயாரம்ப விசேஷத்ருச்யா


ப்ராசீ திசா பாஸத தேவகீவ


ஸ்லோகத்தில் கிழக்கு திக்கு கர்ப்பவதியாயிற்று என்றார். இதில் மேலும் கிழக்கு திக்கு அடைந்த பெருமைகளைக் குறிக்கிறார். கோத்ரம் என்றால் மலை என்றும் வம்சம் என்றும் பொருள். மலைகளை பிளந்தவன் இந்திரன். அவனது திசை கிழக்கு. க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அர்த்தராத்திரியில்தான் சந்திரன் உதயமாகும் அப்பொழுது இருள் அகன்று கிழக்கு தனி ஒளியைப் பெறுவது இயற்கை. சந்திரன் உதிக்க ஆரம்பித்ததால் கிழக்கு வெளுத்த ஒளி உடையதாய் , அதற்கு அதிபதியான இந்திரனால் கொண்டாடப்படுவதாய் உள்ள கிழக்கானது தேவகி போல் விளங்கியது. இந்த ஸ்லோகத்தில் கூறப்படும் ஒவ்வொரு விசேஷணமும் இரண்டு அர்த்தங்கள் கொண்டது. தேவகியைப் போலே கிழக்கு திக்கு ஒளிமிக்கதாயிருந்தது. எம்பெருமான் கர்பத்தில் எழுந்தருளிவிட்டபடியால் தமோகுணத்தின் பலிதமான சோகமோ பயமோ இல்லாமல் இருந்தாள் தேவகி. கோத்ரபிதா என்பதற்கு கண்ணனால் என்று பொருள். (ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வாழ்ந்ததால் கோத்ரத்தை பேதித்து வாழ்பவன்). விது என்றால் ஹ்ருஷிகேசனையும் விதூதயம் சந்திரனையும் குறிக்கும். விதூதயம் என்பதற்கு சமீபத்தில் அவதரிக்கப் போவதால் மிகுந்த அழகுடையவளாய் இருந்தாள் எனவும் கொள்ளலாம். ஆகவே தேவகி கிழக்குதிக்கு போல் இருந்தாள் எனக் கூறாமல் கிழக்கு தேவகீ போல் இருந்தது என்கிறார்.


52. அபத்யலாபம் யது வீரபத்ந்யா:


மஹோததௌ மக்ந ஸமுத்திதேந


தத்வம்சமாந்யேந ஸமீக்ஷ்ய பூர்வம்


ப்ராப்தம் ப்ரதீதேந புரோதஸேவ


யதுவின் வம்சத்தில் மிகவும் சிரேஷ்டராய் விளங்கும் வஸுதேவரின் பத்நியான தேவகிக்கு புத்திரன் பிறக்கப் போகிறான் என்பதை அறிந்து கொண்டு கடலில் நீராடிவிட்டு வெளியே வரும் சந்திரன் முன்னமே விஷயம் தெரிந்து வரும் புரோஹிதன் போல் வந்து விட்டான். யதுவம்சம் சந்திர வம்சம்தானே. அதில் கௌரவத்துடன் விளங்குவதால் அவனே வருவது பெருமை எனப்பட்டது.


53. க்ஷ்வேலோபமே ஸந்தமஸே நிரஸ்தே


ஸோமம் ஸுதாஸ்தோம மிவோத்வமந்தீ


துக்தோத வேலேவ துதோஹ லக்ஷ்மீம்


ஆசா மநோக்ஞாம் அமரேந்த்ரமாந்யா


விஷம் போன்றதொரு காரிருள் நீங்கிவிட்டது. சந்திரன் தோன்றிவிட்டான். இது அமுதப்பெருக்கு என்னலாம்படி உள்ளது. க்ஷீரஸமுத்திரத்தின் கரை போன்ற அழகான கிழக்குதிக்கு அழகான சோபையை பொழிகிறது. ஒருக்கால் கிழக்கு சந்திரனை உமிழ்ந்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.


54. தமஸ் ஸமாக்ராந்திவசேந பூர்வம்


ஜக்ஞே நிமக்நைரிவ பூததாத்ர்யம்


ததஸ் துஷாராம்சுகராவகூடை:


உத்தப்யமாநைரிவ சைலச்ருங்கை:


முன்னம் இருள் பரவியதன் காரணமாக பூமியில் மலைகளின் சிகரங்கள் மூழ்கிவிட்டது போல் இருந்தன. பிறகு சந்திரனின் கிரணங்கள் படிந்தபொழுது மறுபடியும் அவை வெளிக் கிளம்புவன போல் ஆயின.



55. திசஸ் ததாநீம் அவநீதராணாம்


ஸகைரிகை: பாரதபங்கலேபை:


சகாசிரே சந்த்ரமஸோ மயூகை:


பஞ்சாயுதஸ்யேவ சரை: ப்ரதீப்தை:


அப்பொழுது திக்குகள் எல்லாம் மிகவும் பொலிந்து விளங்கின.காரணம் சந்திரனின் கிரணங்கள் மலைகளின் சிகரங்களில் படிகின்றன.கைரிகம் என்பது தாதுப்பொருள். கைரிகம் என்பது தங்கத்தையும் குறிக்கும். பாரதம் என்பது பாதரஸத்தைக் குறிக்கும். பாதரஸத்தில் கலந்து தங்கம் பூசப்பட்டது போல கிரணங்களினால் சிகரங்கள் விளங்கின. அப்போது அவை மன்மதனின் பாணங்கள் போல் ஜொலித்தன.திக்குகளாகிற பெண்கள் சந்திர கிரணங்களாகிற பூக்களை சூட்டி மகிழ்வது போலும், சந்திர கிரணங்கள் மன்மத சரங்களைப்போலவும் தோற்றமளித்தன.


56. ஸமுந்நமந்தீ குடிலாயதாத்மா


சசாங்க லேகோதய த்ருச்யகோடி:


வியோகிசேதோலவநே ப்ரவீணா


காமோத்யதா காஞ்சந சங்குலேவ


சந்திரனின் ரேகை, உதயமாகும்போது அழகான நுனி தோன்றுகின்றது. வளைந்தும் நீண்டும் வெளிக் கிளம்புகின்றதாய், சந்திரன் கோடு தோன்றும்போது தோன்றும் அழகான நுனி, பிரிந்த காதலர்களின் மனதை அறுப்பதில் கை தேர்ந்தவனான காமனால் ஏந்தப்பட்ட தங்க அரிவாள் போல் இருந்தது.


57. தமாம்ஸி துர்வாரபலஸ் ஸ கால:


ப்ராயோ விலோப்தும் ஸஹஸா திசாம் ச


மநாம்ஸி காமஸ்ச மநஸ்விநீநாம்


ப்ராயுங்க்த சைத்யாதிகம் அர்த்தசந்த்ரம்


காலத்தின் பலத்தை எவ்வாறு அறிய இயலும். அதன் பலத்தை தடுத்து நிறுத்த யாராலும் இயலாது. அது விரைகிறது. திக்குகள் வரை படர்ந்துள்ள இருட்களை முழுதுமாக போக்கிட முனைந்துவிட்டது. அதுமட்டுமல்ல. காலத்தைப் போலவே காமனும் பலசாலி. தைரியசாலிகளான ஸ்தீரிகளின் உள்ளங்களை அடக்குவதற்கும் முனைந்துவிட்டான். இருவரும் செய்வது என்ன? அர்த்த சந்திர ப்ரயோகம்தான். தோன்றியது அஷ்டமிசந்திரன். அர்த்த சந்திரனானபடியால் வர்ணனம்.


58. கரேண ஸங்கோசிதபுஷ்கரேண


மதப்ரதிச் சந்த கலங்கபூமா


க்ஷிப்த்வா தமஸ்(sh) சைவலம் உந்மமஜ்ஜ


மக்நோ திசாநாக இவேந்துரப்தே:


சந்திரன் கடலிலிருந்து தோன்றுகிறான். அவன் திக்நாகம் போல் இருக்கிறான். திக்கஜம் கடலில் மூழ்கி வெளிவருவது போல் உள்ளது. இருள் கடலில் படர்ந்த பாசி போல் உள்ளது. அவற்றை விலக்கிக் கொண்டு வருவது போல் சந்திரனுக்கும் யானைக்கும் அவ்வளவு பொருத்தம். சந்திரன் தனது கையினால்(வருகை) தாமரை மலரை மூடச் செய்கிறான். யானையும் தனது தும்பிக்கையை மடக்கி கிளம்பும். யானைக்கு மதஜலம் பெருகும். சந்திரனின் களங்கம் மதஜலம் போல் தோன்றும்.


59. மதோதயா தாம்ர கபோலபாஸா

சக்ரஸ்ய காஷ்ட்டா சசிநா சகாஸே

உதேயுஷா வ்யஞ்ஜயிதும் த்ரிலோகீம்

நாதஸ்ய ஸா நாபிரிவாம்புஜேந

இந்திரனுடைய திக்கான கிழக்கு மூன்று உலகங்களையும் விளங்கச் செய்யத் தோன்றிய சந்திரனால் மிகவும் ப்ரகாசித்தது. மேலும், தோன்றும்போது கொஞ்சம் சிவப்பு நிறம் கலந்திருக்கும். ஆஸவம் போன்ற மதுவின் சேர்க்கையினால் கொஞ்சம் சிவந்து ஒளிபெற்ற கன்னமுடையவனாகத் தோன்றினான். அவனால் கிழக்கு விளங்கியது. இது எப்படி இருக்கிறது என்று வர்ணிக்கிறார். பத்மநாபனுடைய நாபியானது தாமரைப்பூவால் எத்தகைய சோபை அடையுமோ அத்தகையது என்பதாம். நாபிகமலமானது ப்ரம்மனைத் தோற்றுவித்து அவன் வாயிலாக மூன்று உலகங்களையும் தோற்றுவிக்குமோ அத்தகைய தாமரை போல சந்திரன் விளங்கினான்.


60. ஸமீபத: ஸந்தமஸாம்பு ராசே


பபார சங்காக்ருதிரிந்துபிம்ப:


பித்தோபராகாதிவ பீதிமாநம்


தோஷாவில ப்ரோஷித த்ருஷ்டிதத்தாத்


இருள் என்ற பெருங்கடலில் சங்க வடிவில் உள்ள சந்திரபிம்பம் மஞ்சள் நிறத்தை ஏந்தி நின்றதாம். இந்த மஞ்சள் நிறம் பித்த சம்பந்தத்தினால் ஏற்படுவதாம். பிரிந்து வாழும் காதலர்கள் கண்கள் விழித்து அதனால் கண்களில் தோஷங்கள் ஏற்பட அதன் காரணமாக பித்த சம்பந்தம் அதிகமாக சந்திரபிம்பமும் மஞ்சள் நிறமாகத் தோன்றுகிறது.


61. க்ருசோதரீ லோசந க்ருஷ்ணலக்ஷ்மா

ராத்ர்யாஸ் ஸமித்தோதயராக இந்து:

கஸ்தூரிகா குங்கும சித்ரிதாத்மா


கர்ப்பூர விந்யாஸ இவாந்வபாவி


மெல்லிய இடையுடைய மங்கைகளின் கண்கள் போல் கறுத்து இருப்பதையே அடையாளமாகக் கொண்டவனும் உதய காலத்தில் ஒரு விதமான சிவப்பு நிறமுடையவனுமான சந்திரன், கஸ்தூரியும் குங்குமமும் இழைத்து ராத்திரி என்கிற் பெண்ணுக்கு இடப்பட்ட கர்ப்பூரதிலகம் போல காட்சியளித்தான். ஸாமுத்ரிகா லக்ஷணத்தில் க்ருசோதரீ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் கண்கள் கறுத்து இருக்கும். அதேபோல் சந்திரனின் களங்கம் தெளிவாகத் தெரிவதாம். க்ருஷ்ணதாரை என்றும் கூறுவர். தனது வம்சத்தின் அடையாளமாக க்ருஷ்ணனையே பெற்ற பெருமை சந்திரனையே சேரும் எனக் கொள்ளலாம். உதய காலத்தில் ஒரு வகையான சிவப்பு நிறமாயிருக்கும். கஸ்தூரி குங்குமம் ஆகிய இரண்டும் சேர்த்து விசித்திரமாக அமைந்தது. சந்திரன் வெளுப்பான கர்ப்பூரமானான். சந்திரனுடைய களங்கம் கஸ்தூரியாயிற்று. இரவு கறுத்த நிறப்பெண்ணான படியால் சந்திரனைத்தான் திலகமாகப் பெற்றாளோ?


62. ப்ரஸாதம் அந்தக்கரணஸ்ய தாதா


ப்ரத்யக்ஷயந் விச்வமிதம் ப்ரகாசை:


தமஸ்ச ராகஞ்ச விதூய சந்த்ர:


ஸம்மோதநம் ஸத்வமிவோல்லலாஸ


முன் ஸ்லோகத்தில் சந்திரன் இரவென்னும் பெண்ணுக்கு திலகமாகத் தோன்றினான். சிவப்பும், கறுப்பும் கலந்த நிலை. இங்கு நல்ல வெளுப்பான நிலையை அழகாக வர்ணிக்கிறார். இருளையும், சிவந்த நிறத்தையும் உதறித் தள்ளிய சந்திரன் ஆனந்தத்தை அளிக்கும் ஸத்வகுணம் போல் விளங்கினான். ஸம்மோதநம் என்பதற்கு ஸத்துக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் என்று கொள்ளலாம். அன்றியும் ஸத்துக்கள் என்பதற்கு நக்ஷத்திரம் என்றும் பொருள். சந்திரன் நன்றாகத் தோன்றியதும் நக்ஷத்திரங்கள் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்தன என்பதாம். வ்ருத்தியடைந்த ஸத்வம் விச்வத்தை தனது ஞானப்ப்ரகாசத்தாலே காணச்செய்கிறது என்று கொள்ள வேண்டும்.


63. நிசாகரோ வாரிதி நிஸ்வநாநாம்


நிஷ்பாதக: குந்தருசிஸ் சகாசே


உதேஷ்யதஸ் சக்ரப்ருதோ நியோகாத்


ப்ராதுர்பவந் ப்ராகிவ பாஞ்சஜந்ய:


சந்திரனின் உதயத்தால் கடலில் ஓசை கிளம்புகிறது. இத்தகைய நிசாகரன் குருக்கத்திப்பூ போல் விளங்கினான். குருக்கத்தி வெண்மையானது. அதன் வெண்மை நிறம் போன்று ஒளி பெற்று விளங்கினான். 60 வது ஸ்லோகத்தில் சங்கின் வடிவொத்த சந்திரன் என்றார். இதில் சந்திரன் பாஞ்சஜன்யமாகவே இருக்குமே என்கிறார். சக்ரதாரி பிறக்கப்போகிறான் என்பதை அறிந்து கொண்டு ஞானசாரமான சங்கம் முன்னமே தோன்றிவிட்டது. நித்யயோகத்தை உடைய சங்கம் இப்படி பிரிந்து வரலாமோ என்றால் அதற்கு விடையாக நியோகாத் என்கிறார். அதுவும் அவனுடைய ஆக்ஞையே என்றார். அவனுடைய கையில் உள்ள பாஞ்சஜன்யம் போல் தோன்றினான் என்கிறார். பாஞ்சஜன்யம் ஒலித்த வண்ணம் இருக்கும். கடலும் அவ்வாறேயாம். கடலில் பிறந்தவன் பாஞ்சஜன்யன் என்ற நிலையும் உண்டு. அந்த சங்கை கண்ணனே தேடி எடுக்கிறார் அல்லவா? அதேபோல் நித்யயோகமுடைய பாஞ்சஜன்யம் நியோகத்தினால் முன்னம் தோன்றியது. இப்போது சந்திரனை வர்ணிப்பதால் அதனையே உபமானமாக்கியிருக்கிறார்.


64. ம்ருகேண நிஷ்பந்ந ம்ருகாஜிநஸ்ரீ:


ஸ்வபாத விக்ஷேப மிதாந்தரிக்ஷ:


முரத்விஷோ வாமநமூர்த்திபாஜ:


பர்யாயதா மந்வகமத் சசாங்க:


ந்திரனில் ஒருவகையான கறுப்பு தென்படுகிறது. பார்ப்பதற்கு முயல் போல் இருப்பதால் சசாங்கன் என்று சந்திரன் அழைக்கப்படுகிறான். அந்த மிருகம் போர்வை போல் அமைந்திருக்கும். கறுப்பாய் இருப்பதால் க்ருஷ்ண அஜினமாய்த் தோன்றும். முயல் வெண்மையாய் இருப்பினும் சந்திரனுடைய காந்தியில் அது கறுப்பு நிலையை அடைந்துவிட்டது. நோக்கும்போது அது க்ருஷ்ணாஜினத்தை மார்பில் போர்த்தியிருப்பது போல் தோன்றும். வாமனனும் க்ருஷ்ணாஜினத்தை தரித்து யக்ஞவாடத்தில் தோன்றியது போல் சந்திரனும் தோன்றினான். தனது கிரணங்கள் எங்கும் படுவதால் ஆகாசம் முழுவதும் நிறைந்துவிட்டது போல் இருந்தான். வாமன மூர்த்தி இவ்வுலகை அளந்தபோது அவர் திருவடி படாத இடமே இல்லை என்பது போல் சந்திரனும் ஆகாசத்தில் அடிவைத்தபோதே ஆகாசம் முழுவதையும் வ்யாபித்துவிட்டான். இவ்வாறு சந்திரனும் வாமன ஸாத்ருச்யத்தை அடைவான் போலும்.


65. ஜிகாய சங்காச்ரித சைவலாப:


சாருத்யுதேஸ் சந்தரமஸ: கலங்க:


உதீயமாநஸ்ய மஹோர்மி யோகாத்


ஸாமிச்யுதம் ஸாகரமூலபங்கம்


சந்திரன் எவ்வளவு ஒளியுடன் இருக்கிறான். அவன் உதயமாகும்போது களங்கத்துடனேயே தோன்றுகிறான். முன்பு அவனை சங்கெனக் கூறினார். இப்போது களங்கத்துடன் கூடிய சந்திரன் பாசையுடன் கூடிய சங்கம் போல் உளன் என்கிறார். மேலும் களங்கத்தினை ஒருபோதும் அழிக்கமுடியவில்லை. எவ்வளவு அலைகளைக் கொண்டு அலம்பினாலும் அதைப்போக்க இயலவில்லை. பாதாளத்திலிருந்து உண்டான சேறு சந்திரன் மீது படிந்து விட்டது. எந்த அலைகளாலும் அழிக்க முடியவில்லை. பாதிதான் போயிருக்கிறது. மீதி வெற்றியோடு விளங்குகிறது.


66. உதேத்ய துங்காத் உதயாத்ரி ச்ருங்காத்


தமோகஜாந் அக்ர கரேண நிக்நந்


நிசாகரஸ் தந்மத லேப லக்ஷ்மா


ஸிதாபிசு: ஸிம்ஹதசாம் அயாஸீத்


உதயமலையில் உன்னதமான சிகரத்தை அடைந்த சந்திரன் தனது கிரணங்களைப் பரப்பி இருளாகிற யானைகளை அழிக்கலானான். அந்த யானைகளின் மதஜலமானது சந்திரன் மீது அழியாத களங்கமாகப் பதிந்துவிட்டது. அதனால் அவன் ஓர் வகையான சிங்கத்தன்மையைப் பெற்று விட்டான். சூரியனுக்கு உதயாஸ்த சமயங்கள் உண்டு. ஆனால் சந்திரனுக்கு அப்படிச் சொல்ல இயலாது. பௌர்ணமி தொடக்கமாக கிழக்கும் சுக்லபக்ஷத்தில் மேற்கும் தோற்றமாகும். இப்போது க்ருஷ்ணபக்ஷம் ஆனபடியால் சந்திரனுக்கு உதயாத்ரி. சிங்கம் சிகரத்தில் ஏறி வேரிமயிர் முழங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து புறப்படுமாப்போலே உலகில் உள்ள இருளனைத்தும் போக்க சந்திரன் இருளாகிற யானைகளைத் தனது நுனிக்கரங்களால் பிளப்பது போல் புறப்படுகிறான்.


67. நிசீத லக்ஷ்ம்யா இவ புண்டரீகம்


நிர்வேச ஸிந்தோரிவ பேநசக்ரம்


தம் அந்வவைக்ஷந்த விலாஸ தந்த்ரா:


தாராமணீநாமிவ ஸூதி சுக்திம்


அழகான அர்த்தராத்திரி என்ற லக்ஷ்மியின் கையில் விளங்கும் வெண்டாமரையோ என்கிறார். லழ்மியின் கையில் இருக்கும் தாமரை சிவந்ததாயிற்றே. நான்முகனுக்கும்,கலைமகளுக்கும் அல்லவா வெண் தாமரை என்று கேட்கலாம். இங்கு புண்டரீகம் என்கிறார். இதற்கு வெள்ளைக் குடை என்றும் பொருளாகும். ஆகவே லக்ஷ்மிக்கு பிடிக்கப்பட்ட வெண்குடை என்றும் கொள்ளலாம். ஆனந்தம் என்ற கடலின் நுரைக்குவியலோ, நக்ஷத்திரங்களாகிற முத்துக்கள் பிறக்கும் முத்துச்சிப்பியோ என்று சந்திரனை பலவாறு ரசித்தனர்.


68. உதார தாராகண புத்புதௌக:


சந்த்ரேண ஸம்பந்ந ஸுதாப்ரஸூதி:


அசேஷத்ருச்யாம் அதிகம்ய லக்ஷ்மீம்


ஆலோக துக்தோததிரா பபாஸே


சந்திரனின் ஒளி எங்கும் பரவிவிட்டது. அவ்வொளிப்பரப்பே பாற்கடலோ என்னும்படியாக இருந்தது. பாற்கடலின் தன்மைகள் பல இதில் காணப்பெற்றன. கடலெனில் குமிழிகள் இருக்கும். இங்கும் நக்ஷத்திரங்களின் கூட்டங்கள் குமிழெனக் காணப்பட்டன. அமுதம் தோன்றியது. சந்திரனே அக்கடலில் தோன்றிய அமுதெனக் காணப்பட்டான். அங்கு கமலை பிறந்தாள். இங்கும் உலகெலாம் நேரிடையாகக் கண்டு களிக்கும் சோபை-அழகு-லக்ஷ்மீகரம் நிலைத்திருந்தது.


69. ப்ரகாசயந் விச்வமிதம் யதாவத்


சந்த்ரோதயோத்தீபித ஸௌம்யதார:


ஆஸீந் நிசீதோ ஜகத: ப்ரபூதாத்


அந்தஸ்ய தைவாதிவ த்ருஷ்டிலாப:


இரவு ஒளி பெற்று விளங்குகிறது. உலகத்தையே விளங்கச் செய்கிறது. சந்திரோதயத்தினால் மேலும் பளபளப்பு பெற்ற நக்ஷத்திரங்கள் உலகின் சிறந்ததொரு அத்ருஷ்டமே. குருடனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்? அவ்வண்ணமே அந்நள்ளிரவு திகழ்ந்தது.


70. விசோதிதாத் விஷ்ணுபதாத் க்ஷரந்தீ


விஷ்வங்முகீ ஸாகர வ்ருத்தி ஹேதோ:


தமோமயீம் ஸூர்யஸுதாம் நிகீர்ய


ஜ்யோத்ஸ்நா நதீ சோணமபி வ்யமுஞ்சத்


நிலவின் பெருமையை இங்கு ஆறாக நிரூபணம் பண்ணுகிறார். விஷ்ணுபதம் என்கிற ஆகாயத்தில் பெருகிய கங்கை போல் ஸமுத்ரம் வ்ருத்தியடைய வேண்டுமென்று விரும்பிய சந்திர நதி நாலாபுறமும் பாய்ந்ததாம். மேலும் கறுப்பான யமுனையை விழுங்கிவிட்டு சிவப்பு நிறமான சோணையை விட்டு விட்டது. சந்திரன் வெளுத்திருப்பதால் ஸத்வமயம். யமுனை கறுத்திருப்பதால் தமோ மயம். ஸத்வம் பாய்கிறபோது தமஸ்ஸும் ரஜஸ்ஸும் நிற்பதில்லை. கங்கை யமுனையோடும், சோணையோடும் கலந்தும், பிரிந்தும் செல்வது நாம் அறிந்ததே! சந்திர நதி ஓடுவதால் இருளும் இல்லை. சிவப்பு நிற்மும் இல்லை.(சோணா தற்போது சோன் என்று அழைக்கப்ப்டுகிறது).


71. ப்ரியாமுகை ஸ்தோமயது ப்ரதிஷ்டம்


பீத்வா நவம் ப்ரீத இவாம்புராசி:


ஸமேத்ய சந்த்ரயுதி நர்த்தகீபி:


தரங்கிதம் தாண்டவம் ஆததாந


நிலவினை கங்கையாகவும்,யமுனை,சோனையைக் கடந்து பின் கடலோடு கலந்தது என்று கூறுகிறார். இங்கு ஆறுகள் புகுந்தபின் கடலில் ஏற்படும் பரம் போக்யமான நிலையை வர்ணிக்கிறார். பிரியையான ஆறுகள் கொடுத்த நீரை மதுவாக வர்ணிக்கிறார். ப்ரியை கொடுத்த தோயமும் மதுவாகலாம். கடலை புருஷனாகவும், நதிகளை பெண்களாகவும் வர்ணிப்பது மரபன்றோ!. இங்கு சமுத்திரராஜன் தனது ப்ரியைகள் கொடுத்த மதுவை நன்றாக குடித்துவிட்டு சந்திரனின் கிரணங்களாகிற நாட்டியக்காரிகளுடன் கூடி தானும் அலை மோதும் தாண்டவத்தைச் செய்யலாயிற்று.


72. கலங்க சித்ரீக்ருதம் இந்துகண்டம்


தமஸ் ஸமத்யாஸித ஸத்வகல்பம்


அசுஷ்க சைவாலமிவாபபாஸே


ஸித்தாபகா ஸைகதம் அர்த்தத்ருச்யம்


சந்திரனின் பாதியுருவம் கலங்கத்தினால் நன்றாகவே தோற்றம் அளிக்கிறது. தமஸ்ஸும், ஸத்வமும் கலந்ததாய் தோன்றுகிறது. உலராத பாசியையுடைய ஆகாசகங்கையின் மணற்பரப்போ என்று சொல்லும்படி விளங்குகின்றது.


73. ஸ்வமத்ய ஸம்பந்ந விசுத்ததாமா


ச்யாமாச ஸா தேவகநந்திநீ ச


தம: க்ஷிபந்த்யௌ ஜகதாம் த்ரயாணாம்


அந்யோந்ய ஸம்வாதம் இவாந்வபூதாம்


ஸ்வசப்தம் ஸ்யாமா என்பது இரவைக் குறிக்கிறது. இரவின் மத்யம் நள்ளிரவு. அப்போது ஒரு விசுத்தமான தெளிவு. ஆயிரம் ஆயிரம் நக்ஷத்திரங்கள் இருந்தாலும் ஒரு சந்திரன் இருந்தால் எவ்வளவு சோபை ஏற்படுகிறது. அஷ்டமி சந்திரன் ஆனாலும் பாதிதான் படும் என்பதில்லை. இவ்வாறு தனது இடையிலேயே விசுத்தமான ஒளியை உடைய அந்த இரவும், தனது இடையிலேயே விசுத்தமான தேஜஸ்ஸையுடைய தேவகியும் மூவுலகங்களில் இருக்கும் இருளை அகற்றியவாறு ஒருவருக்கொருவர் நிகரோ என்று சொல்லலாம்படி அனுபவிக்கப் பெற்றது.


74. சாகாவகாசேஷு க்ருதப்ரவேசை:


சந்த்ராதபை: ஆச்ரிதசாருக்ருத்யை:


ஹதாவசிஷ்டாநி தமாம்ஸி ஹந்தும்


ஸ்தாநம் ததாக்ராந்தம் அம்ருக்யதேவ


கிளைகளின் இடையே சந்திரனுடைய கிரணங்கள் விழுகின்றன. இலைகளின் நிழலும் அங்கு தென்படுகிறது. கிளைகளின் வழியாகச் சென்ற அந்த கிரணங்கள் அழிந்தது போக மிச்சமுள்ள இருளை தேடி அலைகிறது. சந்திரனால் விரட்டப்பட்ட இருளானது எங்கெங்கு ஒளிந்து கொள்ள அவகாசம் கிடைக்குமென தேடி கிளைகளின் அந்தரங்களில் வந்து ஒளிந்து கொண்டன. இந்த இருளினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க ஒற்றர்கள் போல் கிரணங்கள் செயல்பட்டு அவை சென்றவிடத்தில் சென்று தேடுகின்றன போலும்.


75. பராக்ருத த்வாந்த நிகாய பங்கை:


பர்யாப்த தாராகண பேந புஞ்ஜை:


அசோபத த்யௌரஸமாயுதஸ்ய


யச:ப்ரவாஹைரிவ சந்த்ரபாதை:


ஆகாயம் மிகவும் அழகாக விளங்கிற்று. சந்திரனின் கிரணங்கள் அவ்வாறு படிகின்றன. அவை சாதாரணமானவை அல்ல. இருளான சேற்றை அறவே அழித்துவிட்டன. எங்கும் குவியல் குவியலாக இருக்கும் நக்ஷத்திரங்கள் நுரையின் குவியல்களோ என்னலாம்படியாக உள்ளது. மேலும் மன்மதனின் புகழ் என்னும் ப்ரவாகமோ என்பது போலவும் இருக்கிறது. அஸமாயுதஸ்ய என்பதற்கு மன்மதனுடைய என்று பொருள். ஐந்து பாணங்களை உடையவன். மலரையே பாணமாகக் கொண்டவன். அம்மாதிரி பிறர் வைத்துக் கொள்ள இயலாது.மேலும் அஸம என்பதற்கு நிகரற்ற என்றும் கொள்ளலாம். இங்கு அஸமாயுதன் என்பது பகவானையும் குறிக்கும். அவனுடைய ஆயுதங்கள் எல்லாம் நிகரற்றவை. ஆதலால் கர்ப்பத்திலேயும் தரித்து வருவான் போலும். தனக்கு சரியில்லாத வேல் முதலானவற்றை கொண்டு கோஸஞ்சாரம் பண்ணுவானாதலால் இவன் அஸமாயுதன். அவன் வருவதற்கு முன்பே அவன் புகழ் ப்ரவஹித்துவிட்டது போன்று சந்திர கிரணங்கள் இருந்தது.


76. ததாநயா திக்ஸரிதாம் ப்ரஸாதம்


ப்ரஸக்த ஹம்ஸாகமயா ஸ்வகாந்த்யா


அபாக்ருத த்வாந்தகந ப்ரவ்ருத்யா


சரத்த்விஷா சந்த்ரிகயா சகாசே


நிலவு மிகவும் ஒளி பெற்றிருந்தது. சரத்ருதுவில் எத்தகைய ஒளி இருக்குமோ அத்தகையதாக இருந்தது. ஆறு போன்ற திக்குகள் எல்லாம் தெளிவைப் பெற்றன. அன்னங்களும் வரத் தொடங்கிவிட்டன- இருள் அறவே அகன்று விட்டபடியால் காரிருளோ, கருமேகமோ வர வாய்ப்பில்லை. ஹம்சாகமயா என்கிறார். அன்னங்கள் வந்து சேரும்படியான தனது ஒளியினால் என்று கொள்ளலாம்.


77. கலாவதா காம விஹார நாட்யே


காலோசிதம் கல்பயதேவ நர்ம


அமோக மாயாபலிதங்கரண்ய:


ப்ராயோ திசாம் தீதிதய: ப்ரயுக்தா:


கலைகளில் வல்லவன் சந்திரன்.அவன் மன்மதலீலைகள் என்பதொரு நாட்டியத்தில் அக்காலத்திற்கேற்ப ஒரு கூத்து நடத்துவான் போலும். அவனுக்கு பிறரைப் பரிஹஸிக்கும் தன்மையும் எதையும் மாற்றிச் சொல்லும் பெருமையும் உண்டு. நாட்டியஸில்பம் தெரிந்த சூத்ரதாரன் அவன். திக்குகளில் அவன் கிரணம் படிகிறது. அவை வெளுத்துக் காணப்படுகின்றன. திக்குகளாகிற பெண்களின் தலைமயிர்கள் எல்லாம் நரைத்துவிட்டன போல் செய்துவிட்டான்.இது காமவிஹார நாட்டியத்தில் சந்திரன் செய்த கேலிக்கூத்தாக அமைந்தது.


77. கதம்பமாலாபி: அதீதலாஸ்ய:


கல்யாண ஸம்பூதிர் அபூத் ப்ரஜாநாம்


ப்ரியோதயஸ்பீதருசோ ரஜந்யா:


ஸந்தோஷ நிச்வாஸ நிப: ஸமீர:


இந்த ஸ்லோகத்தில் சந்திர கலையும், சுகமான காற்றும் கலந்து அதனால் ஏற்படும் சோபையை சொல்கிறார். கடம்ப மரங்கள் வரிசை வரிசையாக இருந்து ந்ருத்யம் பயில்கின்றனவோ! இது காற்றின் விசேஷணத்தினைக் குறிக்கிறது. ஆட்டம் கற்பது கதம்பம். ஆட்டி வைப்பது காற்று. இதனால் மக்களுக்கு ஒருவிதமான ஆனந்தோதயம் ஏற்பட்டது. தனது ப்ரியனான சந்திரனின் உதயத்தால் வெளிச்சம் மிகப்பெற்ற இரவென்னும் மங்கையின் ஸந்தோஷமென்னும் மூச்சுக்காற்றுக்கு நிகராக தெள்ளிய இரவின் மெல்லிய காற்று அமைந்தது.


79. ப்ராயேண ஹம்ஸை: அவதூதஸங்கா


சாருஸ்மிதா ஸம்ப்ருத ப்ருங்கநாதா

ஸர்வோபபோக்யே ஸமயே ப்ரஸுப்தம்

குமுத்வதீ கோகநதம் ஜஹாஸ


இரவில் தாமரை உறங்கும்.ஆம்பல் அலரும்.அன்னங்கள் தாமரையில் நாட்டமுடையவை. ஆதலால் அவை இரவில் ஸஞ்சரிப்பதில்லை. ஆம்பல் ஓடைக்குத்தான் இரவின் பெருமை எல்லாம். ஹம்ஸங்களால் உதறித் தள்ளப்பட்ட ஆம்பல் ஓடை வண்டுகளின் ரீங்காரமும், சந்திரனின் கதிரும் பெற்று புன்னகை செய்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் கமலம் உறங்குவதேனோ!. ஆம்பல் தன்னொளியால் தாமரையைப் பார்த்து நகைக்கிறது.


80. கலங்க லக்ஷேண ஸமைக்ஷி காசித்


கஸ்தூரிகா பத்ர விசேஷகாந்தி:


ஸுதாம்சு பிம்ப வ்யபதேச த்ருச்யே


முக்தே ரஜந்யா முக புண்டரீகே


இவ்வளவு வர்ணித்தும் சந்திரனின் களங்கம் மனதை ஈர்க்கிறது. அதுவும் ஒரு அழகாகத்தான்உள்ளது.ஒரு பெண்ணின் நெற்றியில் அணிந்த கஸ்தூரிகாபத்ரம் போலுள்ளது. இரவு என்ற பெண்ணின் அழகான, தாமரைப்பூ போன்ற முகத்தில் இடப்பட்டதாம். சந்திரபிம்பம் இங்கு முகமாகிவிட்டது.


81. தலேஷ்வவேபந்த மஹீருஹாணாம்


சாயாஸ் ததா மாருத கம்பிதாநாம்


சசாங்கஸிம்ஹேந தமோகஜாநாம்


லூநாக்ருதீநாமிவ காத்ரகண்டா:


இதில் சந்திரனை சிங்கமாகவும், நிழலை யானைகளாகவும் குறிப்பதோடு நிற்காமல் மரத்தடிகளில் ஏற்படும் அசைவுகளை அழகாக வர்ணிக்கிறார். சந்திரன் சிங்கமானான். அவன் இருளென்னும் யானைகளைக் கொன்று தோலை உரித்து எறிந்துவிட்டான். கீழே விழுந்த யானையின் அறுபட்டு விழுந்த பாகங்கள் துடிப்பது போல மரங்களின் கீழ்பகுதிகளில் வெளுப்பும் கறுப்புமாக அசைவுகள் ஏற்படுகிறதை வர்ணிக்கிறார்.


82. தமஸ் தரங்காந் அவஸாதயந்த்யா


ஸமேயுஷீ சந்த்ரிகயா மஹத்யா


ச்யாமா பபௌ ஸாந்த்ர நவோத்பலஸ்ரீ:


ஸுரஸ்ரவந்த்யேவ கலிந்த கந்யா


முந்திய ஸ்லோகத்தில் நிழல்களின் அசைவுகளைக் கூறினார். இப்போதோ கங்கையும் யமுனையும் கலந்ததோ என்பது போன்று அந்நிலவுடை இரவு விளங்கியதாம். இரவு ய்முனையைப் போன்று கறுத்தும் நிலவு தேவகங்கையைப் போன்று வெளுத்தும் இருக்கிறது. நிலவின் ஒளியில் இருள் அடங்கிவிட்டது. கங்கையின் வெளுப்பு கலந்தபோது யமுனையின் கறுப்பு அடங்கிவிடும். சந்திரிகையோடு கலந்த ச்யாமா கங்கையோடு கலந்த யமுனை ஆயிற்று. ச்யாமா - நல்ல வயதுடைய பெண்ணாக இருளை வர்ணிக்கிறார். இருளாகிற அலைகளை அடக்குவதாயும், மிகப் பெரியதாயும் உள்ள தேவகங்கை போன்றதொரு நிலவுடன் கறுநெய்தல்கள் பூத்துத் தனிச்சிறப்புடைய இரவு என்ற ய்முனை கலந்து ஒரு பெண்ணுக்கு அடங்கின மற்றோர் பெண் போல விளங்கினாள்.


83. ஸ்வவிப்ரயோக வ்யஸநாத் நிபீதம்


ப்ருங்காபதேசேந குமுத்வதீபி:


ஸுதாபிராப்லாவ்ய கரஸ்திதாபி:


ப்ரச்யாவ யாமாஸ விஷம் ஸுதாம்சு:


தனது பிரிவினால் துயருற்று, ஆம்பல் ஓடைகள் வண்டுகளை வாயில் போட்டுக்கொண்டுவிட்டன. வாழமுடியாது என்றெண்ணி விஷத்தையும் குடித்துவிட்டன. (பகலில் ஆம்பல்கள் மலருவதில்லை. மொட்டித்தே இருக்கும். அப்பொழுது அதில் வண்டு சிக்கிக்கொண்டு அதிலேயே இருக்கும். ஆம்பல் வண்டெனும் விஷத்தைக் குடித்துவிட்டன போலும்). சந்திரன் தோன்றினான். தனது காதலிகள் விஷம் குடித்துவிட்டதை அறிந்தான். தனது கையில் உள்ள அமுதத்தை அவர்கள் மீது கொட்டினான். குமுதங்கள் வாய் திறந்தன. அப்பொழுது வண்டுகள் வெளியேறிவிட்டன. ஓஷதீசன் ஆனபடியால் விஷத்தைக் கக்க வைத்துவிட்டான் போலும்.


84. சகாசிரே பத்ர கலா ஸம்ருத்யா


வ்யோமோபமே வாரிணி கைரவாணி


கலங்க த்ருச்ய ப்ரமராணி காலே


ஸ்வநாத ஸாதர்ம்யம் உபாகதாநி


ஓடைகளில் நீர் ஆகாயம் போலுள்ளது. அதில் ஆம்பல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களிலும் இதழ்கள் கலைகள் போல் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் வண்டுகள் அமர்கின்றன. வெளுத்த அம்மலர்களில் கறுத்த அவ்வண்டுகள் அமரும்போது ஆம்பல்கள் இரவில் தனது கணவனான சந்திரனோடு நிகரான தன்மையையும் பெற்றுவிட்டது போல் இருக்கிறது. ஆகாயமும் நீரும் ஒன்று. சந்திரனும் ஆம்பல் மலரும் ஒன்று. சந்திரனில் உள்ள கலங்கமும் மலரில் உள்ள வண்டும் ஒன்று. ஆக ஆம்பல் சந்த்ரஸாம்யம் பெற்றுவிட்டது.


85. ஸரிந் முகோபாஹ்ருதம் அம்புராசி:


பீத்வேவ தோயம் மது ஜாதஹர்ஷ:


சகார சந்த்ரப்ரதிபிம்பிதாநாம்


கரக்ரஹை:காமபி ராஸலீலாம்


ஆறுகளின் வாயிலாக அளிக்கப்பெற்றதான இனிய நீரினை மது அருந்துவது போல் அருந்திவிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த கடலானது சந்திரனின் ப்ரதிபிம்பங்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு விலக்ஷணமான ராஸலீலை புரிந்தது.


86. ப்ரஸாத பாஜோரு பயோரபூதாம்


உபாவநிர்த்தார்ய மிதோ விசேஷௌ


நபஸ் ஸ்தலே சீதருசிஸ் ஸதாரே


ஸகைரவ தத்ப்ரதிமா ச தோயே


இரண்டு இடங்களிலும் தெளிவு உள்ளது. எது உயர்ந்தது, எது தாழ்ந்தது? என்று உறுதியாகச் சொல்ல இயலாது!. வானில் சந்திரன். அவனைச் சுற்றி நக்ஷத்திரங்கள். அவ்வாறே நீர்நிலையில் ஆம்பல் கூட்டம். அதன் நடுவில் சந்திரன் ப்ரதி பிம்பம். பிம்பம் நன்றாக உள்ளதா? ப்ரதிபிம்பம் நன்றாக உள்ளதா? தீர்மானிக்க இயலாத வகையில் அமைந்துவிட்டது.


87. நபஸ் துஷாராம்சு மயூக யோகாத்


தமிஸ்ரயா மோக்ஷம் அவிந்ததேவ


அத்ருப்யத: தத்வ விதோ நிசாயாம்


அந்தர் முகம் சித்தமிவாத்ம யோகாத்


ஆகாயம் சந்திரனுடைய கிரணம் பெற்ற யோகத்தினால் இருளிலிருந்து விடுதலையை அடைந்தது போலிருந்தது. இதற்கு ஓர் உதாரணம். தத்வஞானிக்கு புற விஷயங்களில் திருப்தி ஏற்படுவதில்லை. ஆத்மாவில் ஏற்பட்ட யோகத்தினால் இரவிலும் அவருடைய உள்ளம் அந்தர்முகமாகவே உள் நோக்கியே இருக்கும். அந்த அஞ்ஞானம் அவரை அண்டுவதில்லை.


88. ஸஹோதிதா சந்த்ரமஸா பபாஸே


ஜ்யோத்ஸ்நா பயோதேருபஜாதராகா


ததாதநே ஸஞ்ஜநநேபி சௌரே:


ஸஹாயிநீ ஸாகர ஸம்பவேவ


சந்திரன் உண்டானான். அவனோடு அவன் ஒளியும் தோன்றியது. அப்பொழுது அது சிவப்பு கலந்திருந்தது. உதயமாகும் பொழுது அந்த ராகம் இருந்தே தீரும். நிறம் மாறினாலும் நிலவில் அதன் குணம் மாறுவதில்லை. இதுதான் ஜ்யோத்ஸ்னா என்ற நிலவு. இப்போது சௌரி பிறக்கப் போகிறான். ராகமுடைய நிலவு அப்போது ஸஹாயமாகவே தோன்றியது. இந்த நிலவு ஸமுத்திரத்தில் தோன்றிய லக்ஷ்மி போல் விளங்கியது. அவளும் சந்திர சஹோதரி. பிறக்கும்போது அனுராகத்துடன் பிறந்தவள் என்பதாம். வக்ஷஸ்தலத்தை அடைந்ததும் வித்யில்லேகை போலானவள். கிருஷ்ணனாக பிறக்கும்போது அவள் ருக்மிணியாக வருவாள் என்பர். இங்கு ஸஹாயினி என்பதற்கும் அதே பொருள்தான்.


89. ப்ரபுத்த தாரா குமுதாப்தி சந்த்ரே


நித்ராண நிச்சேஷ ஜநே நிசீதே


ஸ தாத்ருசோ தேவபதே: ப்ரஸூதிம்


புஷ்யந் பபௌ புண்யதமோ முஹூர்த்த:


நக்ஷத்திரங்கள், ஆம்பல், கடல், சந்திரன், ஆகியவை விழிப்புடன் உள்ளன. மற்றைய உலகெல்லாம் உறங்குகிறது. அத்தகைய நள்ளிரவில் அவ்வளவு சிறப்பான ஒரு முஹூர்த்த வேளை. தேவநாதனின் ப்ரஸவத்தை பலப்படுத்திக் கொண்டு ஏற்பட்டுவிட்டது.இதல்லவோ புண்யதமமான முஹூர்த்தம். பகவதவதார ஸமயம்.


90. பாகேந பூர்வேண தமோமயேந


ப்ரகாச பூர்ணேந ச பஸ்சிமேந


ததா நிசீத: ஸ ஸதாம் ப்ரஸத்யை


ஸம்ஸார முக்த்யோரிவ ஸந்திர் ஆஸீத்


முன் பகுதியில் இருள்மயமானது.பின் பகுதியில் விசேஷமான ப்ரகாசம் உடையது. இத்தகைய இரவு ஸத்துக்களின் உள்ளம் தெளிய அமைந்துவிட்டது. மேலும் இதை ஸம்ஸாரம்- முக்தி இவைகளின் இணைப்பு வேளை என்றே சொல்லலாம்.


91. ப்ராகேவ ஜாதேந ஸிதேந தாம்நா


மத்யோபலக்ஷ்யேண ச மாதவேந


ப்ரகாமபுண்யா வஸுதேவபத்ந்யா


ஸம்பந்நஸாம்யேவ நிசா பபாஸே


இந்த இரவு சாதாரணமானதல்ல. முதலிலேயே வெளுப்பு தோன்றியது. இடையில் மாதவனையும் காண்பிக்கிறது. எவ்வளவு புண்யம். வஸுதேவரின் மனைவியோடு இது ஸாம்யத்தையும் பெற்றுவிட்டது. இது எப்படி விளங்காமல் இருக்கும்? பெருமாளுக்கு முன்னமே தோன்றினான் சந்திரன். ஜோதி வெளுப்பாகத்தானே இருக்கும். க்ருஷ்ணன் என்ற ஜோதி கறுப்பாக அல்லவோ இருக்கும்! அவ்வாறில்லை. இங்கு தாம்நா என்பது பலராமனைக் குறிக்கும். சந்திரன் பலராமன் லக்ஷ்யமாகிறான்.


92. ஸஹ ப்ரதிச்சந்த சசாங்க பேதை:


ஸரஸ்வதாம் தாண்டவிந: தரங்கா:


அவேக்ஷ்ய சௌரேரவதார வேலாம்


ஸந்தோஷ நிக்நா இவ ஸம்ப்ரணேது:


இதற்கு முன் ஸ்லோகத்தில் நள்ளிரவினை தேவகியோடு ஒப்பிட்டார். இப்போது அவதார காலம் நெருங்குவதால் நீர்நிலைகளில் ஏற்படும் பூரிப்பினை வர்ணிக்கிறார். கடல்களில் கிளம்பும் அலைகள் அவதார வேளையை அறிந்து கொண்டு ஸந்தோஷம் தாங்க முடியாதவைகளாய் சந்திரனின் ப்ரதிபிம்பங்களோடு கலந்து குதிப்பும் கும்மாளமுமாக இரைச்சலிடுகின்றன.


93. அவாதிதோதீரித வாத்ய கோஷம்


திசாபிராம்ரேடித திவ்ய கீதம்


ஸதாம் உபஸ்தாபித ஸத்வலாஸ்யம்


ஸங்கீத மங்கல்யம் அபூத் ததாநீம்


ஒரு அழகான சங்கீத விழாவே அப்பொழுது நடைபெற்றது எனலாம்.வாசிக்காமலேயே வாத்ய கோஷம் ஏற்பட்டது. திக்குகள் எல்லாம் சேர்ந்து பாட்டின் ஒலியை ப்ரதிபலிக்கின்றன. ஸத்துக்களுக்கு ஸத்வகுணம் நடமாடுகிறது. மூன்றும் சேர்ந்துதானே சங்கீத விழா.


94. ப்ரதீபிதை: கம்ஸக்ருஹேஷு தீபை:


தாபைஸ்ச பாவேஷு தபோதநாநாம்


அலப்யத க்ஷிப்ரம் அலப்தபங்கை:


அஹேது நிர்வாண தசாநுபூதி:


முன் ஸ்லோகத்தில் வாத்ய கீதங்களை வர்ணித்தார். இங்கு கம்சனுக்கு ஏற்பட்ட அநிஷ்டங்களையும் அதனால் ஸாதுக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் வர்ணிக்கிறார்.கம்ஸனுடைய மாளிகைகளில் ஏற்றப்பட்டு இருந்த விளக்குகள் யாவும், தபஸ்விகளின் உள்ளங்களில் அணையாது பெருகி வந்த தாபங்களும் காரணமேயில்லாமல் அணையும் தன்மையை அடைந்துவிட்டன.


95. அஜ: ஸ்வஜந்மார்ஹதயாநுமேநே


யாம் அஷ்டமீம் யாதவபாவமிச்சந்


த்விதீயயா பாவித யோகநித்ரா


ஸாபூத் ததாநீம் ப்ரதமா திதீநாம்


அஜன் இப்போது யாதவனாகப் பிறக்கப்போகிறான். தனது பிறப்பிற்கு ஏற்றதாக அஷ்டமி திதியை ஸங்கல்பித்துக் கொண்டான். அஷ்டமி இதனால் ப்ரதமையாகி விட்டாள். ஆதலால்தான் யோகநித்ரை நவமியில் தோன்றினாள். நவமி த்விதியை ஆகிவிட்டது.


எட்டாவது கர்ப்பம் கொல்லப்போகிறது என்ற ஆகாச வாணியை ஸத்யமாக்க எட்டிலேயே பிறக்க எண்ணினார். எட்டாவதாகப் பிறக்கப் போவதாலும் அஷ்டமியை வரித்தார். அஷ்ட வஸுக்களுக்கும் வஸுதேவர், தேவர் என்பதால் அந்நிலையை உணர்த்த அஷ்டமியை விரும்பினார். எட்டு எட்டு என்று எண்ணியே கம்சன் எட்டாத இடத்தை அடையப் போகிறபடியால் அஷ்டமியை தனது ஜன்மத்திற்கு ஏற்றதாக்கினார். அந்த அஷ்டமி திதிகள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கியது. அஷ்டமி ப்ரதமையாவதும் நவமி த்விதியை ஆவதும் ஆச்சர்யம் தானே!.


96. அத ஸிதருசிலக்நே ஸித்த பஞ்சக்ரஹோச்சே


வ்யஜநயத் அநகாநாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்


நிகிலபுவந பத்மக்லேசநித்ராபநுத்யை


திநகரம் அநபாயம் தேவகீ பூர்வஸந்த்யா


பிறகு சந்திரலக்னத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருக்கும்போது நல்லவர்களுக்கு வெற்றியை அளிப்பதும் அதனாலேயே ஜயந்தி என்ற பெயர் பெற்றதுமான வேளையில் தேவகி என்ற கிழக்கு ஸந்த்யை அழிவில்லாத சூர்யனை உண்டாக்கிவிட்டது.ஸிதருசி- சந்திரன் அவனும் அப்போதுதான் உதயம் ஆகவே லக்னம் வ்ருஷபமாயிற்று. சந்திரன், செவ்வாய், புதன், குரு,சனி ஆகிய ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருக்கின்றன. ரிஷபம், மகரம், கந்யா, கடகம், துலாம் ஆகியவை உச்ச ஸ்தானங்கள். ஐந்து க்ரஹங்கள் உச்சமானால் அவன் லோகநாயகன். அத்புதமாக அவதரித்த அவதார ஸ்லோகம்.


97. அவதரதி முகுந்தே ஸம்பதாம் ஏககந்தே


ஸுரபித ஹரிதந்தாம் ஸ்வாது மாத்வீக திக்தாம்


அபஜத வஸுதேவ ஸ்த்தாநம் ஆனந்த நிக்நை:


அமர மிதுந ஹஸ்தைர் ஆஹிதாம் புஷ்பவ்ருஷ்டிம்



முகுந்தன் அவதரித்து விட்டான். ஸகல விதமான ஐஸ்வர்யங்களுக்கும் ஒரே காரணமாயிருக்கும் முகுந்தன் அவதரித்துவிட்டான். முகுந்தன் எனபதற்கு போகங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன் என்று பொருள். கிழங்கு போன்றவன். மூலகந்தே எனபர். முதற்கிழங்கு என்றும் கொள்ளலாம். முகுந்தன் தான் மூலகந்தம். அவன் அவதரித்தபோது எங்கும் மணம் கமழ்ந்தது. இனிமயும் எங்கும் தோய்ந்தது. ஆனந்த பரவசர்களான தேவர் குழாமெல்லாம் மிதுனங்களாக சொரிந்த மலர் மழையை வஸுதேவ ஸ்தானமானது ஏற்று ஏற்றம் பெற்றுவிட்டது. கம்ஸனின் காராக்ருஹமாக இருந்தபோதிலும் வஸுதேவ ஸ்தானமாதலால் புஷ்பவ்ருஷ்டி. தேவ புஷ்பங்களானதால் கம்ஸாதிகளுக்குப் புலப்படுவதில்லை. இப்போது ஆனந்த நிக்னர்கள் பரவசத்துடன் தம்பதிகளாய் இணைந்து தமது நான்கு கரங்களாலும் மலர்மாரி பொழிந்தனர்.


புஷ்பவ்ருஷ்டியுடன் இந்த ஸர்கம் இனிதே நிறைவுற்றது.



ஸ்ரீ ஹரியே நம;


கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே


ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:

Friday, July 30, 2010

யாதவாப்யுதயம் (YAADAVAABHUDAYAM) - சர்க்கம் -1



யாதவாப்யுதயம் (ஸ்ரீ கிருஷ்ண சரித்ரம்)



யாதவாப்யுதயம்,-ஸ்ரீபாகவதம்,விஷ்ணு புராணம்,ஹரிவம்சம்,முதலிய புராண இதிகாசங்களை ஆதாரமாகக் கொண்டு கவிதார்க்கிக சிம்ஹம் என்று போற்றப்பட்ட ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகனால் இயற்றப்பட்டது. வேதாந்த தேசிகர் இயற்றிய மகத்தானதொரு காவியம் யாதவாப்யுதயம். இதில் 24 சர்க்கங்கள் உள்ளன।மொத்தம் 2642 ஸ்லோகங்கள்.இந்த காவியம் பல காவியங்களில் கையாளப்பட்ட முறைகளை மேற்கொண்டதோடு நிற்காமல் அத்புதமான பரிஷ்காரத்தைச் செய்துகாண்பிக்கிறது.சாஸ்திரீயமான அனுபவம்தான் ச்ரேஷ்டமானது.அதுதான் எற்றைக்கும் நிலைத்து நிற்கும். இந்த நிலையை ஒவ்வொரு ஸ்லோகத்திலும் காணலாம்..


யாதவாப்யுதயம்(முதல் ஸர்கம்)


ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ!


வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி;


ஸ்ரீ யாதவாப்யுதயம் ஸர்கம் எண்:1


(காவ்யாரம்பம்,பூமி பிரார்த்தனா,தேவ ஸ்துதி: பகவத் தர்ஸனம்,பாஷணம்)




1. வந்தே ப்ருந்தாவநசரம் வல்லவீஜநவல்லபம்!


ஜயந்தீஸம்பவம் தாம வைஜயந்தீவிபூஷணம்!!


கோகுலாஷ்டமியில் தோன்றியவனும் ।வைஜயந்தி என்ற வனமாலையை அணிந்தவனும் பிருந்தாவனத்தில் சஞ்சாரம் செய்த இடைச்சிறுமிகளுக்கு வல்லபனாய் திகழ்ந்த சோதியான கண்ணனை வணங்குகிறேன்।




2. யத் ஏகைக குணப்ராந்தே ச்ராந்தா நிகமவந்திந;


யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம்பசா:


யாருடைய குணங்களில் ஒவ்வொன்றிலும் ஒருசில பகுதிகளைச் சொல்வதிலேயே வேதங்களாகிய ஸ்துதிபாடகர்கள் ஓய்ந்து போய்விட்டனவோ அத்தகைய பெருமையுடையவனின் குணங்களை உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு சாதாரண மனிதர்களுக்கு எங்ஙனே இயலும்?




3. சக்த்யா ஸௌரிகதாஸ்வாத: ஸ்த்தாநே மந்ததியாமபி!


அம்ருதம் யதி லப்யேத கிம் ந க்ருஹ்யேத மாநவை:




மிதமான அறிவு பெற்றவர்களானாலும் தமது சக்திக்கு ஏற்ப கிருஷ்ணனுடைய கதைகளை அனுபவிப்பது உசிதம்தான்.அமுதம் கிடைக்குமேயானால் சாதாரணமானவர்கள் அதை பருகாமல் விட்டுவிடுவோமா என்ன?.




4. வஸுதாச்ரோத்ரஜே தஸ்மிந் வ்யாஸேச ஹ்ருதயே ஸ்திதே!



அந்யேபி கவய: காமம் பபூவு: அநபத்ரபா!!



புவியின் செவியில் பிறந்த வால்மீகியும்,வியாசரும் இதயத்திலேயே இருக்கும்போது பிறரும் கவிகளாகி விட்டார்களே! ஐயோ பாவம் என்ற நிலையன்றோ இவர்களுடையது.





5. ஸ கவி: கத்யதே ஸ்ரஷ்டா ரமதே யத்ர பாரதீ!


ரஸ பாவ குணீ பூதைர் அலங்காரைர் குணோதயை:




எங்கு பாரதி(சரஸ்வதி)விளையாடுகின்றாளோ அவன் அன்றோ கவி எனப்படுவான்?எத்தனை படைப்புகளைச் செய்கின்றான் அக்கவி! ரஸம்- பா(ba) அவைகளுக்கு ஏற்ற அலங்காரங்கள்,அற்புதமான குணப்பெருக்கங்கள்,இவைகளுடன் நிரம்பப் பெற்ற ஸரஸ்வதி விளையாடி மகிழ்விக்கின்றபோது அவன் பற்பல சிருஷ்டிகளைச் செய்து விடுகிறான்.




6. ததாத்வே நூதனம் ஸர்வம் ஆயத்யாம் ச புராதநம்


ந தோஷாயைதத் உபயம் ந குணாய ச கல்பதே!!




பழமையானவை என்பதால் ஒன்றிற்கு ஏற்றம் கிடைத்துவிடுவதில்லை. தோன்றிய நாளில் அவையும் புதியவையே.நாட்கள் கழியக்கழிய அவை பழமை பெற்றுவிடுகின்றன.புதுமை என்பது குற்றமோ,குறையோ ஆகாது.யதுவம்சம் தோன்றியபின் ராமாயணப்பெருமை குறையவில்லை.ஆதிகவி கூறாததை மஹாகவி கூறிவிட்டான் என்று யாரும் மோஹிப்பதில்லை. அதைப்பின்பற்றி வாழ்வு பெறும் காவியங்களே சிலாக்கியமானவை.




7. ப்ரவ்ருத்தாம் அநகேமார்கே ப்ரமாத்யந்தீமபி க்வசித்!


ந வாசம் அவமந்யந்தே நர்தகீமிவ பாவுகா:




மேடு பள்ளம் இல்லாத ஒரு மார்க்கத்தில் ஒரு நர்த்தகி ஆடுகின்றாள்.ரஸிகர்கள் ஆரவாரிக்கின்றனர். அப்பொழுது கதியில் ஒரு சிறு குறை ஏற்பட்டுவிட்டது.இருந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை.அதனால் அவள் நடனம் கற்கவில்லை என்று அவமதிப்பதில்லை. ஏதோ ஒரு சில இடங்களில் சப்தார்த்தகுணதோஷம் ஏற்பட்டாலும் bhaபாவ நோக்குடையவர்கள் கதியில் மதியை செலுத்துவதில்லை.




8. விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸவேதார்ணவாம்ருதம்!


வக்ஷ்யே விபுதஜீவாதும் வஸுதேவ ஸுதோதயம்!!




ஆகவே நான் வெட்கத்தை விட்டுவிட்டேன். வியாசரின் வேதமாகிறது மஹாபாரதம். அது கடல் போன்றது. அதில் அமுதமாய் விளங்குவது வஸுதேவகுமாரனின் உதயம்.அது கவிகளுக்கும் தேவர்களுக்கும் உணவாகிறது.வாழ்க்கைக்கு மிகவும் போக்யமானது.அத்தகைய பிரபந்தத்தை நான் கூறப்போகிறேன்.




9. க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபாரூஷிதயா ஸ்வயம்!


ஏகோ விச்வமிதம் சித்ரம் விபு:ஸ்ரீமாந் அஜீஜநத்!!






ஸ்ரிய:பதி பெரிய பணக்காரன்.அவன் எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன்.எங்கும் இருப்பவன்.தனக்கு நிகர் எவருமில்லாத தனிப்பட்டவன்.முதலில் தானே தன்னிடத்திலேயே ஒரு சித்திரம் தீட்டுகிறான்.சித்திரம் வரைவதற்கு எழுதுகோலும்,வர்ணமும் வேண்டும்.விளையாட்டு அவனுக்கு எழுதுகோல்.வர்ணம் அவனது கருணை.அவன் எழுதிய சித்திரம்தான் படைப்பு. அதுதான் இவ்வுலகம்.




10. ஜகத் ஆஹ்லாதனோ ஜக்ஞே மநஸஸ் தஸ்ய சந்த்ரமா:


பரிபாலயிதவ்யேஷு ப்ரஸாத இவ மூர்த்திமான்!!




உலகை மகிழ்விக்க சந்திரன் அவனுடைய மனதிலிருந்து உண்டானான்.தெளிவே உருவம் எடுத்துக்கொண்டதோ என்று சொல்லும் வகையில் அவன் அமைந்தான்.காப்பாற்றப்பட வேண்டியவர்களிடத்தில் காப்பாற்றுபவனுக்கு தேவையானது இன்முகம் காட்டலே என்பர்.




11. யத்பத்யஸமுத்பூத:புண்யகீர்த்தி:புரூரவா:


ஸதாம் ஆஹிதவந்ஹீநாம் விஹாரஸ்த்தேயதாம் யயௌ!!




யாருடைய குமாரனுக்கு குமாரன் தோன்றினானோ அவனும் புண்யகீத்தியானான்.(சந்திரனின் குமாரன் புதன்,புதனின் புத்திரன் புரூரவஸ்) அவன் மஹான்களாய் ஆஹிதாக்னிகளாய் இருப்பவர்க்கு பெரிய தைரியம்அளிப்பவனாக இருந்தான்.அக்னி நிர்ணயம் பண்ணுவதில் ஆதாரமாகவும், சாதகமாகவும் பலானுபவ ப்ராப்தியில் நிர்ணேதாகவும் விளங்கினான்.




12. ஸமவர்த்தத தத்வம்ஸ: உபர்யுபரி பர்வபி:


யஸோ முக்தாபலைர் யஸ்ய திசோ தச விபூஷிதா:




அவருடைய வம்சம் நன்றாக செழித்து வளர்ந்தது.படிப்படியாக ஏற்றம் பெற்று பரவலாயிற்று.ஒவ்வொருவரும் புகழை வளர்த்தனர்.முத்துக்களைப் போல புகழ் பெற்று பத்து திக்குகளிலும் அவற்றால் அலங்கரிக்கப் பெற்றன.




13. பபூவ நஹுஷஸ் தஸ்மிந் ஐராவத இவாம்புதௌ!


யமிந்த்ர விகமே தேவா:பதே தஸ்ய ந்யவீவிசந்!!




அத்தகையதொரு வம்சத்திலே பாற்கடலில் ஐராவதம் தோன்றியதைப்போல நஹுஷன் என்ற அரசன் தோன்றினான்.இந்திரனைக் காணாத தேவர்கள் இவனே தகுதி பெற்றவன் என்று தீர்மானித்து இந்திரனுடைய ஸ்தானத்தில் இவனை அமரச் செய்தார்கள்.




14. நரேந்த்ரா:ப்ருத்வீசக்ரே நாமசிந்ஹைர் அலங்க்ருதா:


ஜங்கமாஸ் தஸ்ய வீரஸ்ய ஜயஸ்தம்பா இவாபவந்!!




நஹுஷன் மிகவும் பராக்ரமுடையவன்.பூமண்டலத்தின் பல மன்னர்கள் பெயராலும் அடையாளங்களாலும் அலங்கரிக்கப் பெற்று அந்த வீரனின் நடமாடும் ஜயஸ்தம்பங்களோ என்று சொல்லும் வகையில் விளங்கினர்.




15. சக்திரப்ரதிகா தஸ்ய ஸாத்ரவைரபி துஷ்டுவே!


யதாவத் ஸாதகஸ்யேவ யாவதர்த்தா ஸரஸ்வதீ !!






அவனுடைய சக்தி தடங்கலற்றது.சேர்ந்தவர்கள் மட்டும் கொண்டாடப்படுவதன்று.சத்ருவாலும் போற்றப்பட்டது.சாதகனின்(சரஸ்வதி அருள் பெற்ற) வாக்கு எவ்வளவு பொருளுடையதோ அதுவும் எவ்வளவு பொருத்தமானதோ அவ்வளவு சிறந்ததாக இருந்தது.




16. வீரோ ரஸ இவோத்ஸாஹாத் நஹுஷாத் அப்யஜாயத!


யயாதிர் நாம யேநைந்த்ரம் அர்த்தாஸநம் அதிஷ்டிதம்!!




அந்த நகுஷனிடமிருந்து யயாதி தோன்றினான்.உத்ஸாஹத்திலிருந்து உண்டாகும் வீர ரஸமோ என்று சொல்லும் பாங்கினைப் பெற்றான்.இவன் வீர்யத்திற்கு வேறு எடுத்துக்காட்டு என்ன வேண்டும்?இந்திரனுடன் அவன் ஸிம்ஹாசனத்திலேயே ஏறி அமர்ந்து விட்டான்.




17. விசால விபுலோத்துங்கே யத்பாஹுசிகராந்தரே!


ஆஸீத் வீரச்ரியா ஸார்த்தம் பூமிரர்த்தாஸனே ஸ்திதா!!




யயாதியின் தோள்பட்டையானது விசாலமாயும் உயர்ந்ததாயும் விளங்கியது.அவனுடைய தோளில், வீரலக்ஷ்மியும்,பூமியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.




18. நிதேசம் தஸ்ய ராஜாந:ந சேகுரதிவர்த்திதும்!


ப்ராப்த ஸ்வபர நிர்வாஹம் ப்ரமாணமிவ வாதிந:




அரசர்கள் யயாதியின் கட்டளையை மீறி நடக்க இயலாதவர்களாகவே ஆகிவிட்டனர். இது உண்மைதான்.வாதிகள் தம் பக்ஷத்திற்கும் பிறருடைய பக்ஷத்திற்கும் ஏற்றவாறு அமைந்துவிட்ட ப்ரமாண வாக்கியத்தை மீறி எதுவும் சொல்ல முடியாது. ஓய்ந்துவிடுவர்.




19. தடாகமிவ தாபார்த்தா:தமிந்த்ரமிவ நிர்ஜரா:


பாவா இவ ரஸம் பவ்யா:பார்த்திவா:பர்யுபாஸத!!




தாபத்தினால் வெதும்பியவர்கள் அழகான நீர் நிரம்பிய தடாகத்தை அடைந்து நீராடி தாபத்தைத் தணித்துக் கொள்வர்.தேவர்கள் இந்திரனைத் தமக்குப் புகலிடமாகக் கொண்டு தேவலோக இன்பத்தை அடைவர்.கருத்துக்கள் (பாவங்கள்) ரஸத்தை அடைந்து நிறைவுறும்.அதுபோலே பாரில் உள்ள மன்னர்கள் அனைவரும் யயாதியை அடைந்து வாழ்ந்தனர்.


20. யதுர் நாம ததோ ஜக்ஞே யத்ஸ்ந்ததி ஸமுத்பவை:


ஸமாநகணனாலேக்யே நிஸ்ஸமாநைர் நிஷத்யதே!!




யயாதியின் குமாரனாக யது என்பவன் தோன்றினான்.இந்த வம்சத்தில் உண்டானவர்கள் எல்லாருமே நிகரற்றவர்கள்.யார் யாருக்கு நிகர் என்றால் எல்லோருமே தனக்கு நிகர் ஒருவர் இல்லாதவர்களாகவே அமைந்து விட்டனர். சித்திரத்தில் தீட்டும்போதுதான் இது காணக்கிடைக்கிறது.




21. தேஹீதி வததாம் ப்ராய:ப்ரஸீதந் ப்ரத்யுவாச ஸ;


லலித த்வநிபி:லக்ஷ்மீ லீலாகமல ஷட்பதை:




யது தானவீரன்.யாசகன் யாசிக்கின்றபோதே அவன் தெளிவை அடைகிறான்.அதாவது அவன் பதிலே சொல்லவில்லை.அவன் கொடுத்த தானத்தினால் தானம் வாங்கினவன் வீட்டில் லக்ஷ்மி குடியேறிவிட்டாள்.அவள் கையில் தாமரைப்பூ. அதில் வண்டினம் முரல்கிறது.அந்த வண்டின் ஒலியே இவன் அளித்த பதிலாம்.




22. ஸ ச வ்ருத்தவிஹீநஸ்ய ந வித்யாம் பஹ்வமந்யத!


ந ஹி சுத்தேதி க்ருஹ்யேத சதுர்த்தீ சந்த்ர சந்த்ரிகா!!




யது ஆசார சீலமில்லாதவனின் கல்வியை ஏற்பதில்லை,சதுர்த்தீ சந்திரனின் நிலவு சுத்தமென்று யாரும் ஏற்பதில்லையே!




23. அபுந: ப்ரார்த்தநீயஸ்ய ப்ரார்த்திதாதிக தாயிந:


அர்த்திந: ப்ரதமே தஸ்ய சரமாந் பர்யபூரயந்!!


.


யதுவிடம் ஒருமுறை பிரார்த்தித்தால் போதும்.தான் வேண்டியதைக் காட்டிலும் வேண்டிய அளவில் அளித்துவிடுவான்.அவனிடம் யாசகம் பெற்றவர்கள் அவனிடம் பெற்ற செல்வத்தைக் கொண்டே தாங்களும் கொடையாளி ஆகிவிடுவார்கள்.எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை அளித்து பூர்த்தி செய்து வைத்துவிடுகின்றனர்.




24. ஸராணாம் ஸாத்ரவாணாஞ்ச ஸந்தாநே மஹௌஜஸ!


தஸ்ய நிர்தூத லக்ஷேண த்வி:க்வசித் நாப்யபூயத!!




அவன் மிகவும் ஓஜஸ்வியானவன்.பாணங்களை அவன் ப்ரயோகிப்பது ஒரு முறையே. அது குறி தவறியதில்லை.தானவீரன் என்பதால் அவன் சரங்களை வாரிவாரி விடுவதில்லை. ஒரு குறிக்கு ஒரே பாணம்தான்.சத்ருக்கள் அவனிடம் வந்தால் அவர்களை அழித்துவிடுவதில்லை. மாறாக அவர்களை அரவணைப்பதில் பின் தங்கியதில்லை. பாணங்களுக்கும் குறி தவறியதில்லை.ஸந்திக்கும் குறிப்பு தவறியதில்லை. ஆதலால் இருவிஷயங்களிலும் இரண்டாம் தரம் என்பதே இல்லாமல் போய்விட்டது.




25. யுக்ததண்டம் அமித்ராணாம் க்ருதாந்தம் ஸமவர்த்திநம்!


தக்ஷிணம் லோகபாலம் தம் அமந்யந்த திவௌகஸ:




அவன் லோகபாலனாகவே திகழ்ந்தான்.சத்ருக்களுக்கு அவன் யமனாகவே காட்சியளித்தான்.யமன் லோகபாலர்களில் ஒருவன். யுக்தமான தண்டனைவிதிப்பவன்.ஒரு முடிவு எடுத்தால் அதற்கு மாறுபாடு இல்லாதவன். வேறுபாடில்லாமல் சமமாக நடப்பவன்.இந்த அம்சங்களைக் கொண்டு அவனை லோகபாலனாகவே தேவர்கள் தீர்மானித்தவர்.




26. யஸ: ப்ரஸூநச்ஸுரபி: யதுஸந்தாந பாதப:


பபூவ விபுத ப்ரீத்யை பஹுஸாக: க்ஷமாதலே!!




யதுவின் சந்த்தியானது ஒரு அழகான தேவதருவான சந்தான வ்ருக்ஷமான கல்பதருவாகவே அமைந்தது. அந்த மரத்தில் புகழ் என்னும் மலர் பூத்து நறுமணம் வீசியது.இதைக்கண்டு தேவர்களும்,அறிவாளிகளும் ப்ரீதியை அடைந்தனர்.ஆனால் இந்த தேவதருவானது பூமியில்தான் பல கிளைகளை உடையதாகத் திகழ்கிறது.




27. வம்சே ஸமபவத் தஸ்ய வஸுதேவ: க்ஷிதீச்வர:


ஜநக: ப்ராக்பவே யோபூத் தேவதாநவ யூதயோ:




அத்தகைய யதுவின் வம்சத்தில் பூமியை ஆள்கின்ற மன்னனாக வசுதேவர் தோன்றினார்.இவர் யாரோவென எண்ணவேண்டாம். முற்பிறவியில் இவரே தேவர்களுக்குன் அசுரர்களுக்கும் தந்தையாக விளங்கினார்.




28. ஆநகாநாஞ்ச திவ்யாநாம் துந்துபீநாஞ்சநிஸ்வநை:


ஸஹஜாதம் யமாசக்யு: ஆக்யயாநக துந்துபிம்!!




திவ்யமான துந்துபிகள்,படஹ வாத்தியங்கள் இவர் பிறக்கும் சமயத்தில் முழங்கிய வண்ணம் இருந்தன. ஆகவே இவர் அநக துந்துபி என்றே அழைக்கப்பட்டார்.




29. தேந நிர்மலஸத்வேந விநிவ்ருத்த ரஜஸ்தமா:


ஜகதீ சாந்த மோஹேவ தர்மோச்ச்வாஸவதீ பபௌ!!




அத்தகைய வஸுதேவர் பிறந்தபொழுது பூமியானவள் நன்கு சோபித்தாள்.அவர் அப்பழுக்கற்ற ஸத்வகுணமுடையவர்.அவரைப் பெற்றபடியால் ரஜஸ்ஸும் தமஸும் நீங்கப் பெற்றாள். மோஹம்,மயக்கம் அற்றவளாய் தர்ம்மாகிற மூச்சு விடுபவளாய் பூமி ஆயிற்று.




30. ஸ விஷ்ணு: இவ லோகாநாம் தபநஸ் தேஜஸாமிவ!


ஸமுத்ர இவ ரத்நாநாம் ஸதாம் ஏகாச்ரயோபவத்.!!




உலகங்களுக்கெல்லாம் விஷ்ணுபோலவும்,தேஜஸ்ஸுகளுக்கெல்லாம் சூரியன் போலவும்,ரத்னங்களுக்கெல்லாம் கடல் போலவும் நல்லவர்களுக்கு ஒரே உறைவிடமாக இருந்தார்.




31. ப்ரக்யாத விபவே பத்ந்யௌ தஸ்ய பூர்வம் ப்ரஜாபதே:


ரோஹிணீ தேவகீ ரூபே மநுஷ்யத்வே பபூவது:




அவருக்கு இரு மனைவிகள். இவர்களின் பெருமைகளைச் சொல்ல இயலாது. முன் மன்வந்தரத்தில் கச்யபப்ரஜாபதியின் பத்னிகள். மநுஷ்ய ரூபத்தில் வரும்பொழுது ரோஹிணி தேவகிகளாக அவதரித்தனர்.




32. அக்ஷுத்ர கதி சாலிந்யோ:தயோர் அந்யோந்ய ஸக்தயோ:


ஐகரஸ்யமபூத் பத்யா கங்கா யமுநயோரிவ!!




அவர்கள் இருவரும் மட்டமான போக்கு இல்லாதவர்கள். ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்ந்தனர். வஸுதேவரை அடைந்த அவர்கள் அந்நியோன்னியமாய் வாழ்ந்தனர். கங்கையும், யமுனையும் இணைந்து ஒரே ரஸமாக விளங்குவது போன்றேயாயிற்று இவர்களின் ரஸமான வாழ்க்கை.




33. ஸ தாப்யாம் அநுரூபாப்யாம் ஸமநுஷ்யத் ஸமேயிவாந்!


வ்யக்திஹேதுர் அபூத்தேந ஸபர்யங்கஸ்ய சார்ங்கிண:




இவ்விரு மனைவியரையும் அநுரூபமாகப் பெற்று வஸுதேவர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். மேலும் ஆதிசேஷனுடன் கூடிய சார்ங்கியான பகவானுடைய அவதாரத்திற்கு தோற்றத்திற்கு காரணமாக ஆனார்.




34. அலிப்ஸத ந ஸாம்ராஜ்யம் ஸோர்த்தகாமபராங்முக:


யத்ருச்சாகதம் ஐச்வர்யம் ஆந்ருண்யருசிர் அந்வபூத்!!




வஸுதேவர் மன்னர் ஆயினும் அவர் சாம்ராஜ்யத்தை விரும்பவில்லை.தனது முயற்சியில்லாமல் கிடைத்ததைக் கொண்டு அவர் வாழ்க்கை நடத்தினார்.தேவதைகளுக்குட்பட்ட கடனைக் கழிக்க அவர் யக்ஞம் செய்தார். பித்ருக்களுக்கு ஏற்பட்ட கடனைத் தொலைக்க முயற்சித்தார். அதற்காக விஹிதமான ப்ராப்தமான ஸுகங்களை அனுபவித்தார். இது உத்தமர்களின் லக்ஷணம்.




35. கயாசித் அசரீரிண்யா வாசா வ்யவஸிதாயதி:


தேவகீம் வஸுதேவஞ்ச கம்ஸ: காராம் அயோஜயத்!!




முன்பின் தெரியாத ஒரு அசரீரி வாக்கு உண்டாயிற்று. அதனைக் கேட்டான் கம்சன். தனது வருங்காலம் பாழாக இருப்பதை உணர்ந்து கொண்டான். தேவகி, வஸுதேவர் ஆகிய இருவரையும் சிறைக்கூடத்தில் அடைத்துவிட்டான்.




36. ஸ காலாதிபல: கம்ஸ: காலநேமிர் அநேஹஸா!


ஸர்வ தைதேய ஸத்வாநாம் ஸமாஹார இவோதித:




கம்ஸன் நமனைக் காட்டிலும் விஞ்சிய பலத்தை உடையவன். முன் பிறவியில் காலநேமியாயிருந்தவன் தானே இப்போது கம்சனாக இருக்கிறான். உலகில் உள்ள அஸுரபலமெல்லாம் இணைந்து கம்ஸ வடிவத்தில் உள்ளது போல் இருந்தான்.




37. ஏதஸ்மிந் நந்தரே தேவீ மேருமத்யமுபேயுஷ:


ப்ராஜபதிமுகாந் தேவாந் ப்ராஹ ஸாகர மேகலா!!




இவ்வாறிருக்க பூமாதேவி மேருமலையின் மத்தியில் இருக்கும் பிரமன் முதலான தேவர்களைக் கண்டு இவ்வாறு கூறினாள்.




38. விதிதம் பவதாம் தேவா: விச்வரூபேண விஷ்ணுநா!


மஹீயாந் தர்மசீலேஷு பாரோ யத்தந்நிவேசித:




விச்வரூபியான விஷ்ணுவினால் தர்மசீலர்களிடத்தில் பெரிய பாரம் வைக்கப்பட்டுள்ளது என்பதனை தேவர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவீர்.




39. அதர்ம நிக்நைர் அதுநா தர்மஸேது விபேதகை:

அஸங்க்யைர் அத்புதைஸ் துங்கை: க்ரம்யே ராக்ஷஸ பர்வதை:



அதர்மத்திற்கு ஆட்பட்டு, தர்ம மரியாதைகளையே சின்னாபின்னமாக்கி, கணக்கேயில்லாத அத்புதமான உயர்ந்த்தான ராக்ஷஸ பர்வதங்களாலே நான் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளேன்.




40. அத ஆலோசித ஜகத்திதை: ஸுரகணை: ஸ்வயம்!


ந பதாமி ந பித்யே ச யதாஹம் க்ரியதாம் ததா!!




உலகுக்கு நன்மை ஏற்பட வேண்டும். அதற்காக தேவர்கள் குழாம் குழாமாகக் கூடி தாமே யோசிக்கத் தொடங்கிவிட்டனர். நான் பிளக்கப் பெற்று சிதறிப் போகாமலும் விழுந்து மடியாமலும் இருக்கும் வண்ணம் ஏதாகிலும் நீர்தான் செய்தருள வேண்டும் என்று பூமியானவள் பிரார்த்தித்தாள்.




41. இதி தே பூததாரிண்யா நிஸ்ருஷ்டார்த்தா திவௌகஸ:


அவிதுஸ் தத்ப்ரியஸ்யைவ தத்பாரஹரணம் க்ஷமம்.!!




இவ்வண்ணம் பூமாதேவியால் வேண்டிக்கொள்ளப்பட்ட தேவர்கள் யோசித்தனர். அவளுடைய பாரத்தினைப் போக்குவது நம்மால் ஆவதில்லை. அவளுடைய ப்ரிய பர்த்தாவினால்தான் அது இயலும் என்று தீர்மானித்தனர்.




42. புரஸ்க்ருத்ய ஜகத்தாத்ரீம் மனஸோபி புரஸ்ஸரா:


துக்தோத் அதிசயம் தேவம் தூரமேத்யாபி துஷ்டுவு:




நலிவுற்ற பூமாதேவி முன்னே செல்ல, மனஸ்ஸைக் காட்டிலும் வேகமாக முன் செல்பவர்களாய் திருப்பாற்கடலில் நன்றே சயனித்திருக்கும் தேவனை வெகுதூரத்தில் நின்ற வண்ணம் துதிக்கலாயினர்.




43. த்ரிவேதீ மத்யதீப்தாய த்ரிதாம்நே பஞ்சஹேதயே!


வரதாய நமஸ்துப்யம் பாஹ்யாந்தர ஹவிர்புஜே!!




த்ரிவேதி மத்தியில் விளங்குபவனும் மூன்று இடங்களை இருப்பிடமாகப் பெற்றவனும், ஐந்து ஆயுதங்களைக் கரங்களில் கொண்டவனும் உள்ளும் புறமுமாக அமையும் ஹவிர்பாகத்தை நன்றே உண்பவனும் வரதனுமான உனக்கு எங்கள் வணக்கம்.




44. அநந்யாதீந மஹிமா ஸ்வாதீநபரவைபவ:


தயாதீந விஹாரஸ் த்வம் ப்ரணதாந் பரிபாஹி ந:




பிறரை நாடி நின்றே பெருமை பெற வேண்டிய சாதாரண நிலையில்லாதவனும், பிறருடைய வைபவதுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவனும், தயைக்கு உட்பட்டு விளையாட்டை செய்பவனுமான நீ சரணாகதர்களான எம்மை நன்றே காத்தருளுகின்றாய்.




45. ஸ பவாந் குண ரத்நௌகை: தீப்யமாநோ தயாம்புதி:


தநோதி வ்யூஹ நிவஹை: தரங்கைர் இவ தாண்டவம் !!




அத்தகைய தேவரீர் குணங்கள் நிரம்பப் பெற்றவர். குணங்களும் ரத்தினங்கள்போல் ஜ்வலிப்பவை. தயா சமுத்ரன். உன்னிடம் உண்டாகும் வ்யூஹங்களே அலைகள்போல் எழும்பும். இதை பார்க்கின்றபொழுது நீர் ஒரு திவ்யமான தாண்டவத்தையே செய்து வருகிறீர் என்று தோன்றுகிறது.




46. த்வதேக வ்யஞ்ஜிதைர் ஆதௌ த்வதந்யேஷ்வநிதம்பரை: நிகமைரநிகம்யம் த்வாம் க: பரிச்சேத்தும் அர்ஹதி!!




வேதங்கள் உன்னாலயே முதலில் தோற்றுவிக்கப்பட்டன. அதற்கு பல ப்ரமாணங்கள் இருந்தாலும் முதலில் அப்படியப்படியே தோற்றிவித்தவன் நீ. அத்தகைய நியமங்களாலேயே உன்னை அறிய முடியவில்லை என்றால் யார்தான் உன்னை வரையறுத்துச் சொல்ல முடியும்?




47. அமிதஸ்ய மஹிம்நஸ்தே ப்ரயாதும் பாரம் இச்சதாம்


விததா வேத பாந்தாநாம் யத்ர ஸாயங்க்ருதா கதி:




நீ எதற்கும் கட்டுக்கடங்காதவன். உனது மஹிமையை பூராவும் சொல்ல வேண்டும் என்று எண்ணுவது மிகவும் கேவலமானது. மஹிமையை சொல்ல வேதங்கள் முற்படுகின்றன. சொல்லிக் கொண்டே போகின்றன. யாத்திரிகன் மாலை வேளையில் ஒரிடத்தில் தங்கிவிடுவான். மேலே செல்ல இயலாது. எங்கே இருட்டுகிறதோ அங்கேயே தங்கி விடுவான். மஹிமையின் அக்கரையைத் தாண்டிவிடுவேன் என்பது அஸ்தமிக்கிறவரை ப்ரயாணம் செய்து அங்கேயே தங்கிவிடுவேன் என்பது போன்றதாகும்.




48. நம்யஸ்ய நமத: க்ஷுத்ராந் வரதஸ்ய வரார்த்திந:


பத்ரை: பித்ருமத: க்ரீடா கதம் தே கேந வர்ண்யதே!!




இவனுடைய லீலைகள் விசித்திரமாக உள்ளது. உலகெலாம் வணங்கும் நீ ஒரு சிலரை வணங்குகிறாய். உலகுக்கெல்லாம் வரத்தை அளிக்கும் நீ சாதாரண ப்ரம்ஹாதிகளிடம் வரம் கேட்கிறாய். உனது பிள்ளை பிரமன். அவனுடைய பிள்ளை ருத்திரன். இவ்வாறிருக்க, அத்தகைய ஒரு சிலரைத் தகப்பனாராகச் செய்து கொள்கிறாய். உன் விளையாட்டை என்ன என்று சொல்வது. யாரால் தான் சொல்ல இயலும்.




49. நடவத் பூமிகாபேதை: நாத தீவ்யந் ப்ருதக்விதை:


பும்ஸாம் அநந்ய பாவாநாம் புஷ்ணாஸி ரஸம் அத்புதம்!!




நடிப்பவன் பல வேஷங்களை ஏற்று நடிக்கிறான். நீயோ அத்புதமான பல வேஷங்களைப் போடுகிறாய். எந்த வேஷமாக இருந்தாலும் பொருத்தமானதாகவும் ஜாஜ்வல்யமானதாகவும் அமைகிறது. இத்தனைக்கும் நீ நாதன். உன் விளையாட்டு இது என்றால் யாரால் கேட்க இயலும். ஆனால் உன்னையே கண்ணிலும் கருத்திலும் கொண்ட ரசிகர் மன்றத்திற்கு அத்புதமான ரஸத்தை ஏற்படுத்தி மகிழச் செய்கிறாய்!




50. ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த விசித்ராங்குர சாலிநாம்!


ஸலிலம் கர்ம கந்தாநாம் க்ரீடைவ தவ கேவலம்!!




பிரமன் முதலாகவும் கோரைப்புல் முடிவாகவும் உள்ளது இந்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சம் எனும் முளைக்கு மூலமானது கர்மமெனும் கிழங்கு. அது செழித்து முளைவிட்டு வளர உமது விளையாட்டு என்பதே நீராகும்.




51.நிராதார நிஜஸ்தேம்ந: நிருபாதிக ஸேஷிண:


நிரபேக்ஷ நியந்துஸ்தே நிஸ்ஸமாப்யதிகா குணா:




மற்றொருவரை அண்டாத தன்னுடைய நிலையை உடையவர். ஸ்வாபாவிகமாகவே சேஷியாய் விளங்குபவர். ஸ்வதந்திரமாகவே நியமனம் செய்பவர். அத்தகைய குணங்கள் ஈடு இணையில்லாதவை.




52. அநாவிலதியாம் அந்தஸ் சிந்தாமணிரிவ ஸ்புரந்!


திசஸ்யபிமதம் ஸர்வம் அதிரஸ்கார்யதீதிதி:




கலக்கமில்லாத ஞானமுடையவர்களின் இதயத்தில் நீ சிந்தாமணி போல விளங்குகிறாய். உனது ஒளியோ யாராலும் ஒழிக்க ஒழியாதது.ஆதலால் அத்தகைய ஞானிகளின் அபிமதமானது அனைத்தையும் அளித்து வருகிறாய்.




53. ஸம்ஸார மரு காந்தாரே பரிச்ராந்தஸ்ய தேஹின: த்வத் பக்த்யம்ருதவாஹின்யான் ஆதிஷ்டம் அவகாஹநம்.!!




ஸம்ஸாரம் என்பது பெரியதொரு பாலைவனம். இதில் ஜீவன் பரிச்ரமப்படுகிறான். உனது பக்தியாகிற அமுதவாற்றின் பெருக்கினால் அதில் அவன் அவகாஹனம் பண்ணுவான். (இங்கு பக்தி வெள்ளம் அமுதனை நம்மிடம் சுமந்து வருகிறது என்ற ரஸமான பொருளை உணரலாம்.




54. துரிதோதந்வதாவர்த்தே கூர்ணமாநஸ்ய துக்யத:


ஸமக்ரகுணஸம்பந்ந: தாரகஸ் த்வம் ப்லவோ மஹாந்!!




தீவினைகள் என்பவை வற்றாத கடலாகிவிடுகின்றன. மேலும் அதில் பல சுழல்கள். சூழல்கள். இதில் ஆட்பட்டு தவிக்கிறான் ஜீவன். தத்தளிக்கிறான். துக்கம் தவிர வேறெதையும் அறியான். குணங்கள் பல கொண்ட நீதான் தாண்டிவைக்கும் பெரியதொரு படகாக இருந்து அனைவரையும் கரை சேர்ப்பிப்பவன்.




55. அபரிச்சித்யமாநஸ்ய தேசகாலாதிபிஸ்தவ!


நிதர்சனம் த்வமேவைக: த்வதந்யத் வ்யதிரேகத:




தேசத்தினாலோ காலத்தினாலோ அளவிட முடியாத உனக்கு நீதான் உதாரணம். உன்னைத் தவிர மற்றவை, அவை நீ போல் இல்லை எனக் காட்டவே!




56. அகர்த்தும் அகிலம் கர்த்தும் அந்யதாகர்த்துமப்யலம்


ஸங்கல்ப ஸ சிவ: காலே சக்தி லேச: ஸ தாவக:




எதையும் செய்யாமல் இருக்கவோ,அல்லது எதையும் செய்யவோ அல்லது மாற்றிச் செய்யவோ உனக்குத்தான் சக்தி உண்டு. உன்னுடைய சங்கல்பம் தான் அதற்கு மந்திரி போல. சக்தியின் துளியிருப்பினும் அது செய்யும்பாடு சொல்ல இயலாது.




57. யந்மூலம் அகிலம் கார்யம் யதமூலம் அதீமஹே


லக்ஷ்யம் ததஸி யோகாநாம் லக்ஷ்மீ கௌஸ்துப லக்ஷணம்.!!




உலகம் எல்லாம் எதனால் ஏற்பட்டதோ.அதாவது உலகமனைத்துக்கும் காரணப்பொருள் எதுவோ எது,தனக்கு ஒரு மூலப்பொருள் பெற்றதில்லையோ,எது யோகிகளுக்கு தோற்றமளிக்கிறதோ,எது லக்ஷ்மியையும்,கௌஸ்துப மணியையும் தனக்கு அடையாளமாக பெற்றதோ அதுதானே நீ!!




58. த்ரிவர்கம் அபவர்கம் வா ப்ரதிலப்தும் ப்ரயஸ்யதாம்!


ப்ரலயேஷ்வபி தீர்க்காயு: ப்ரதிபூஸ் த்வத் அநுக்ரஹ:




தர்மம்,அர்த்தம் காமம் என்ற த்ரிவர்க்கங்களையும், அல்லது அபவர்கம் எனப்படும் மோக்ஷத்தையும் அடைய ஆசைப்படுபவர்களுக்கும் முயற்சி செய்வோருக்கும் உனது அனுக்ரஹம் மட்டும் ப்ரளய காலத்திலும் அழிவதில்லை. அவ்வளவு தீர்க்காயுஸாக இருந்து உத்தரவாதம் அளிக்கிறது.




59.யத் ஏகம் அக்ஷரம் ப்ரம்ஹ ஸர்வாம்நாயஸமந்விதம்


தாரகம் ஸர்வஜந்தூநாம் தத் த்வம் தவ ச வாசகம்!!




ஒரு எழுத்துதான் எல்லா வேதங்களோடும் இணைந்து வாழ்கிறது. அந்த அக்ஷரம்தான் பெரியது. ஸர்வ ஜந்துக்களையும் அக்கரையில் சேர்த்து வைப்பது. அந்த அக்ஷரம் நீதான். உன்னைதான் அது உரைக்கிறது.ஓம் என்பதே அந்த அக்ஷரம். அந்த அக்ஷரமே ப்ரஹ்மம் எனப் பெற்றது. அது நீதான்.




60. த்வதாலம்பித ஹஸ்தாநாம் பவாத் உந்மஜ்ஜதாம் ஸதாம்


மஜ்ஜத: பாபஜாதஸ்ய நாஸ்தி ஹஸ்தாவலம்பநம்!!




ஸம்ஸாரத்திலிருந்து கொண்டே மூழ்கிப்போகும் ஸத்துக்கள் உன்னைத் தமது கரங்களாலே நன்றாகப் பிடித்துக் கொண்டு விடுவர். அவர்களின் பாபங்கள் மூழ்க ஆரம்பித்துவிடுகின்றன. அவைகளுக்கு கைகொடுத்து தூக்கி விடுவாரில்லை.




61. அநந்யரக்ஷாவ்ரதிநம் சாதகவ்ரதசாரிண:


பவந்தம் அவலம்பந்தே நிராலம்பந பாவநம்!!




தன்னை அடைந்தவர்களை ரக்ஷிப்பதையே வ்ரதமாகக் கொண்டவன் நீ!. ஆனால் இந்த வ்ரதத்தில் விசேஷம் உண்டு. என்னையே குலமகள் போல் தஞ்சமாகப் பற்றினவர்களுடைய யோக க்ஷேமங்களை வஹிப்பதே எனது வ்ரதம் என்றான். இத்தகைய வ்ரதமுடையவன் தன்மையறிவார் இவனையன்றி பிறரை பற்றுவதில்லை. இதற்கு சாதக விரதம் என்று பெயர். இங்கு ஸ்வாமி ப்ரயோகிப்பது ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் பிரமன் துதியில் காணுவது.




62. அநிதம்பூர்வநித்ராணாம் அநஸ்தமயபாநுமாந்!


ஆபாதயஸி பும்ஸாம் த்வம் அபுநஸ்வாப ஜாகரம்.




அநாதி காலமாகவே ஸம்ஸாரமென்ற நித்திரையில் உறங்கியவண்ணம் இருக்கும் சேதனர்களுக்கு அஸ்தமனமேயில்லாத சூரியனாகவே ஆகிறாய். அன்றியும் மறுபடியும் தூக்கம் -மறுபடியும் விழித்தல் என்ற நிலையில்லாமல் எற்றைக்கும் விழிப்பேயான மோக்ஷத்தை அளிப்பவன் நீயே.(பரம வியோம பாஸ்கர:)




63. த்வதேக சரணாநாம் த்வம் சரணாகத ஜீவந;


விபதம் ந: க்ஷிப க்ஷிப்ரம் தமிஸ்ராமிவ பாஸ்கர:




சரணாகதர்கள் உம்மையே ஜீவனமாக கொண்டவர்கள். நாங்கள் உம்மையன்றி ஒருவரையும் ஆச்ரயிக்காதவர்கள். எங்களுடைய ஆபத்தை சீக்கிரமே தொலைக்கவேண்டும். சூரியன் வந்தவுடனே இருள் மாள்வது போல் எமது ஆபத்துக்களும் அழிய வேண்டும்.




64. ஸதி ஸூர்யே ஸமுத்யந்த: ப்ரதிஸூர்யா இவாஸுரா:


ஜகத் பாதாய ஜாயந்தே ஜஹி தாந் ஸ்வேந தேஜஸா!!






ஸூர்யன் இருக்கும்போதே உலகில் ப்ரதி சூர்யர்களாய் அசுரர்கள் தோன்றுகின்றனர். அவர்கள் உலகை அல்லல்படுத்துகின்றனர். நீ உனது பராக்கிரமத்தாலேயே அவர்களை தொலைக்கவேண்டும்.ஒரு தேஜஸினால் அந்த போலியான பிரதி சூரியர்கள் ஒழிய வேண்டும். (ப்ரதி சூர்யர்கள் என்பது சூர்யமண்டலத்தைச் சுற்றி ஒரு குறி ஏற்படுவதாகும். ப்ரதி சூர்யர்கள் ஏற்பட்டால் திருட்டுபயம்,ஒருவிதமான குமுறல், ஆந்தரமான பயம், அரசனுக்கு கெடுதி என்று ப்ருஹத் ஸ்ம்ஹிதை கூறுகிறது).




65. ஸ தைத்யஹத்யாம் இச்சத்பி: ஸுரைரேவமபிஷ்டுத:


அநந்யத்ருச்ய: ஸஹஸா தயயா தர்சநம் ததௌ!!




இப்படியாக எம்பெருமான்,அஸுரர்களை அழிக்க விரும்புகின்ற தேவர் குழாங்களாலே துதிக்கப் பெற்றான்.தம்மைச் சேர்ந்தவரன்றி பிறர் கண்களுக்குப் புலனாகாத அவன் தயையினால் உடனே சேவை சாதித்தான்.




66. ததஸ்தம் தத்ருசுர் தேவா: சேஷபர்யங்கமாஸ்த்திதம்!! அதிரூடசரந்மேகம் அந்யாத்ருசம் இவாம்புதம்!!




சேஷபர்யங்கத்தில் திருவணையில் எழுந்தருளியிருக்கும் அவனை தேவர்கள்அனைவரும் ஸேவித்தனர்.திரை திறந்தவுடன் எவ்வாறு எல்லோருடைய பார்வையும் எம்பெருமான் ஒருவனையே நோக்குமோ அவ்வாறே அவனைஸேவித்தனர். இது மேகமோ? காரொத்ததோ? கடலொத்ததோ? ஆழியில் கிடக்கும் ஊழிமுதல்வனே! அவன் கீழ் ஒரு வெளுத்த மேகம். சரத்காலத்தில்பேய்ந்து ஓய்ந்து லேசாக வானவீதியில் சஞ்சரிக்கும் பூ போன்ற வெளுத்த மேகம். அதன் மேல் வர்ஷித்த கார்மேகம் போல் பெருமான் வீற்றிருந்தான்.




67. பத்ந்யா ஸஹ நிஷேதுஷ்யா பத்மலக்ஷணலக்ஷ்யயா!


ஸவேச்சயைவ சரீரிண்யா ஸூசிதைச்வர்ஸம்பதம்!!


சேஷ பர்யங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் தனது அருகில் அமர்ந்திருக்கும் பத்னியால் மிகுந்த செல்வம் உடையவனாக தோற்றுவிக்கப்படுகிறான் . கறுப்பான மேகம். மேகத்தின் மெருகு மின்னல்!மேகம் எவ்வளவுக்கெவ்வளவு கறுப்போ அதில் அத்தனைக்கத்தனை மின்னலின் அழுத்தம் உண்டு. திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் திருப்பள்ளியில் திருமாலின் திருமேனியுடன் எத்தகைய சேவை! பெருமாளுக்கு அடையாளம் பிராட்டியானால், பிராட்டிக்கு அடையாளம் சொல்ல வேண்டாமா? ஆகவேதான் பத்ம லக்ஷண லக்ஷ்யயா என்கிறார்.



68. ஸுகுமார ஸுகஸ்பர்ச ஸுகந்திபிர் அலங்க்ருதம்


ஸ்வ விக்ரஹகுணாராம ப்ரஸுநைரிவ பூஷணை:




திருமேனியாகிற ஒரு அழகான பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்கள் இவை என்று சொல்லும்வண்ணம் அமைந்திருப்பவை திருவாபரணங்கள். நவரத்னகசிதமானவை. கண்களைக் கவரும் வண்ணம் ஸுகுமாரமாய் இருப்பவை.உறுத்தக் கூடியவை போலன்றி ஸுகஸ்பர்சமாய் அமைந்தவை. அன்றியும் அவை ஸுகந்திகள். ஸுவர்ண புஷ்பமாய் மட்டுமன்றி அவைகளில் நறுமணமும் உண்டு போலும்.




69. ஆரஞ்சித ஜகந்நேத்ரை: அந்யோந்யபரிகைமிதை:


அங்கைரமித ஸௌந்தர்யை: அநுகல்பித பூஷணம்!!




திருவாபரணப் பொலிவினை முன் ஸ்லோகத்தில் சாதித்தார்.இதில் திருமேனியின் ஸௌந்தர்யத்தை அனுபவிக்கிறார். முதலில் திருவாபரணங்களில் தான் பார்வை சென்றது. பின் அவை அமர்ந்திருக்கும் திருமேனியில் அழுந்தியது. உலகில் உள்ள கண்கள் கோடியும் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி குதூகலித்தது. தோள் கண்டார் தோளே கண்டார் முடிவினைக்கண்டார் யாரே என்ற வாக்கினை போல் அவயங்களின் அமைப்பும்,இணைப்பும் அம்மம்மா! ஆபரணங்கள் இந்த ஸ்வாபாவிக அழகின் முன் எம்மாத்திரம்.




70. உத்தேஜித ஜயோத்ஸாஹம் ஆயுதைர் அநகோத்யமை:


ஸௌர்ய விக்ரம சக்த்யாத்யை: ஸஹஜை: ஸ்வகுணைரிவ!!




திவ்யாயுதங்களோடு ஸேவை சாதிக்கிறான் எம்பெருமான். அவை சுறுசுறுப்போடு எம்பெருமானுக்கு உத்சாகத்தை உண்டு பண்ணுகின்றன. வெற்றிக்காகத் துண்டுகின்றன. அவை எம்பெருமானுடைய சஹஜமான ஸௌர்யம்,விக்ரமம்,சக்தி முதலிய குணங்களாகும். அவை தூய்மையானவை. ஆயுதங்கள்,குணங்கள் இரண்டுமே ஜயோத்ஸாகத்தை உண்டு பண்ணுகின்றன.




71. ஸ்வகாந்தி ஜலதேரந்தஸ் ஸித்த ஸம்ஹநநம் ஸ்வத:


மஹிம்நா ஜாதவை சித்ர்யம் மஹாநீலம் இவோதிதம்.!!




இவன் சயனித்திருப்பது வெண்நிறக்கடலில். அவன் சயனித்திருக்கும் அனந்தனும் வெளுப்பு. அவன் திருமேனியின் நிறமோ கருப்பு. திவ்யாபரணங்களின் காந்தியும், திருவின் நிறமும் ஸ்வர்ணமயம். இந்த காந்தி கடல் போன்றது. இந்த காந்தி மண்டலத்திற்குள் அழகான திருமேனிப்பொலிவு. தானாகவே அமைந்த திருமேனிப்பொலிவு. தனது தனிப்பட்ட மஹிமையினாலேயே தோன்றிய திருமேனி. அவயங்களின் அமைப்புகள் தானாகவே ஸுந்தரமானவை. இத்திருமேனி மஹாநீலமணியை ஒத்தது. அதுவும் சமுத்திரத்திலிருந்து தானாகவே உண்டாகும் நீலமணியை ஒத்தது.




72. ச்ருதி ரூபேண வாஹேந சேஷ கங்கண சோபிநா!


ஸ்வாங்க்ரி ஸௌரப திக்தேந தத்த ஸங்க்ராமதோஹளம்!!




ஒரு சிலரை பார்த்தவுடன் ஒரு சிலருக்கு ஒரு வேகம் உண்டாவது வழக்கம் அனந்தன்,கருடன்,விஷ்வக்ஸேனர் ஆகியோர்,நித்யஸூரிகள்,ஸ்வஸ்வகார்ய துரந்தரர்கள். இதில் கருத்மான் திவ்யமான ஸ்தானத்தை வகிக்கிறார். அவர் அருகில் இருந்தாலே எல்லாருக்கும் அளவிடமுடியாத உத்ஸாகம் ஏற்படும். ஏனெனில் பெருமான் ப்ரயாணத்திற்கு சித்தமாயிருக்கிறார். இனி அஸுர பயமில்லை என்ற திடமான நம்பிக்கையூட்டுவதாக இருக்கும். அவரின் பெருமையை சொல்லத்தான் வேண்டும். சேஷனை கையில் கங்கணமாகச் சுற்றிக்கொண்டிருப்பவர். அதுவும் அவரின் திருமேனியை மினுமினுக்கச் செய்கிறது. அவரின் திருமேனியில் தனித்ததொரு பரிமளம் வீசுகிறது. அது ச்ருதி பரிமளமோ? இந்த மணம் வேறெங்கும் கிடையாதே? எம்பெருமானின் திருவடிகளை அவர் தன் கைகளில் ஏந்துகிறார். வேதமணம் கமழும் அவர்தம் திருவடிகளை தாங்கியதால் தான் இவரின் மேலும் அந்நறுமணம் கமழ்கிறது போலும். பெருமாள் திருவடியில் தோய்ந்து மணம் பூசியதால்தான் இவர் பெரிய திருவடியானார் போலும்!




73. ஸ்வவேத்ர ஸ்பந்த நிஸ்பந்த நேதவ்யேந நிவேதிதம்!


பக்தி நம்ரேண ஸேநாந்யா ப்ரதிச்ருண்வந்தம் இங்கிதை:




விஷ்வக்ஸேனர் எழுந்தருளியிருக்கிறார். அவர் தனது பிரம்பின் அசைவினால் ப்ரவேசிக்கின்ற தேவர்களை அசைவற்றவர்களாக்கி விடுகின்றார். அவர் நிவேதனம் செய்வார். நிவேதனம் செய்கின்றபோது விரைத்து முறைத்து நிர்காமல் உடல் முழுவது எப்படித்தான் நிற்கிறது. இதற்கு காரணம் பயம்ல்ல. பக்தியே! இத்தகைய விஷ்வக்ஸேநர் செய்யும் விஞ்ஞாபனத்தை தமது இங்கிதங்களால் ஏற்றுக்கொள்ளும் பொலிவுடன் சேவை சாதிக்கும் எம்பெருமானை தேவர்கள் சேவித்தனர்.




74. அநபாயம் தம் ஆதித்யம் அக்ஷயம் தாரகாதிபம்!


அபாரம் அம்ருதாம்போதிம் அமந்யந்த திவௌகஸ:




தேவர்கள் பெருமானை பலவாறு சேவித்தனர். அவன் அஸ்தமனமே இல்லாத சூர்யன். ராகு கேது க்ரஹணாபாயம் அற்றவன். ஆகவே அதிஸய சூர்யனாக ஸேவித்தனர். க்ஷயமே இல்லாத சந்திரன். கரையேயில்லாத அமுதக்கடல். இவ்வாறு யார் யாருக்கு எவ்விதம் ஸேவிக்கத் தோன்றியதோ அவ்விதம் ஸேவித்தனர். அநபாயம்,அக்ஷயம்,அபாரம் என்கிற மூன்று விசேஷங்களும் அத்புதம்!




75. அபயோதார ஹஸ்தக்ரம் அநகஸ்வாகதஸ்மிதம்!


அவேக்ஷ்ய விபுதா தேவம் அலபந்த த்ருசோ: பலம்!!




திருக்கரம் அபயமளிக்கும் பொலிவுடனும் ஔதார்யத்துடனும் விளங்குகிறது. பார்த்த மாத்திரத்திலேயே பாபங்களைத் தொலைக்கும் தூயதான புன்முறுவலுடன் கூடிய திருமுக மண்டலம். இத்தகைய பெருமைகளையுடைய எம்பெருமானை சேவித்து கண்கள் பெற்றதன் பயனை அடைந்தனர் தேவர்கள்!.




76. தஸ்மை விக்ஞாபயாமாஸு: விதிதார்த்தாய நாகிந:


நிஹதாசேஷ தைத்யாய நிதாநம் ஸ்வாகதே:புந:




எம்பெருமானுக்கு புலனாகாத விஷயம் என்று ஒன்றில்லை. ஆயினும் நமது ஸ்வரூபம் நாம் இதற்காக வந்திருக்கிறோம் என்று விண்ணப்பம் செய்ய வேண்டும். எல்லாம் அறிந்த பெருமானிடம் எல்லாம் அவன் அறிந்ததே என்று தெரிந்தும் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு முன்னமே அவன் அவதரித்து பல அஸுரர்களை அழித்தவன். இப்போது நாகலோகவாசிகள் அனைவரும் திரண்டு வந்து தாங்கள் வந்த காரணத்தை விளக்கலாயினர். (அசேஷ தைத்யாய என்பதற்கு அசுரர்கள் அத்தனை பேரையும் அழித்தவன் என்று பொருள். )




77. த இமே க்ஷத்ரியா பூத்வா க்ஷோபயந்தி க்ஷமாமிமாம்!


தவ தேஜஸி யைர் நாத தநுஜை: சலபாயிதம்!!




நாதனே! உமது தேஜஸ்ஸில் முன்பு விட்டில் பூச்சிகளாக விழுந்து மாண்ட அத்தனை அசுரர்களும் இப்பொழுது பூமியில் அசுரர்களாக பிறந்து இந்த பூமியை படாதபாடு படுத்தி வருகின்றனர்.




78. சதுர்ணாம் புருஷார்த்தாநாம் ப்ரஸவோ யத்ஸமாச்ரயாத்!


ஹவ்ய கவ்ய ப்ரஸூரேஷா தீர்யதே தைத்யபாரத:




தர்மம், அர்த்தம்,காமம்,மோக்ஷம் என்று புருஷார்த்தங்கள் நான்கு. இவை நான்கும் உண்டாவது பூமியை ஆச்ரயித்தால்தானே உண்டாகும். யாக யக்ஞங்கள் மனிதர்களால் தானே செய்யப்படவேண்டும். அவர்களுக்கு ஆச்ரயமளிப்பவள் பூமி. புருஷார்த்தங்களையும் ப்ரஸவிப்பவள் அவளே. பித்ருக்களின் ஆராதனத்திற்கும்,வேள்விக்கு வேண்டியதையும் அவள் தானே அளிக்கிறாள். யாக யக்ஞ ச்ரார்த்தாதிகள் இல்லை என்றால் ஸர்வலோக க்ஷோபம் ஏற்படும். இவளுக்கு கஷ்டம் ஏற்பட்டால் என்ன ஆவது.” அஸுரர்கள் இதை அறிந்துவிட்டபடியால் அவளைச் சிதற அடிக்கின்றனர். அஸுரர்கள்தான் பூமிக்கு பாரமானவர்கள். எல்லாம் தாங்கும் இயல்புடையவள் ஆயினும் பாரம் சுமக்க முடியாமல் அவதிப்படுகிறாள்.




79. ஜாதா நிகில வேதாநாம் உத்தமாங்கோபதாநத:


த்வத்பாத கமலாதேஷா த்வதேகாதீநதாரணா!!




உமது திருவடியில் பிறந்தவள்தானே பூமி. பத்ப்யாம் பூமி: என்று புருஷஸூக்தம் பேசுகிறது. நீர்தானே இவளை தரிக்கவேண்டும். உன் திருவடி தாமரையை ஒத்து எவ்வளவு மிருதுவாக இருக்கிறது! அந்த மெல்லிய இடத்தில் இருந்து தோன்றியவளன்றோ! அத்திருவடியையும் வேதங்கள் தமது சிரஸ்ஸில் தாங்குகின்றன. மேலும் வேதங்களுக்கு தலையணையன்றோ உமது திருவடி. அத்திருவடியை அடைந்தவர்களை காப்பது உமது தர்மம் அன்றோ! ஆதலால் இவள் உம்மாலேயே காப்பாற்றப்பட்டு நிலைக்க வேண்டியவள் என்று பிரார்த்தித்தனர்.




80. யதி ந த்வரதே நாத பாரவ்யபநயே பவாந்!


ப்லாவயிஷ்யந்த்யுதந்வந்த: ப்ருதிவீம் ப்ருதுவீசயே!!




த்விரை என்றால் வேகம். எம்பெருமானே நீர் த்வரிக்க வேண்டும். பூமியிம் பாரம் விரைவில் இறங்க வேண்டும். பத்னியின் பாரத்தை பதிதானே போக்கவேண்டும். ஆகவே அவளை ரக்ஷிக்காது விட்டுவிட்டால் , அவள் மூழ்கிப் போவது திண்ணம். கடல்கள் எல்லாம் பொங்கி எழுந்து கொந்தளித்து பேரலைகள் மோத அவள் இருக்குமிடம் தெரியாமல் மூழ்கடிக்கபடப் போகிறாள்.




81. கருணாதீநசித்தேந கர்ணதாரவதீ த்வயா


மாவஸீதது ப்ருத்வீயம் மஹதீ நௌரிவாம்பஸி




நீயோ கருணையுள்ளம் படைத்தவன். தயைக்கு அதீனமானவன். இந்த பூமி பெருங்கப்பலாகத் திகழ்கிறாள். படகோட்டியில்லாத கப்பல்தான் மூழ்கிவிடும். நீ பெரும் படகோட்டி. இந்த பூமியாகிற பெரும் படகு தவிக்கலாகாது. (கர்ணதாரன் என்றால் இவ்விடத்தில் படகோட்டி). சிறு கப்பலானால் சேதம் குறைவு. மஹத்தான கப்பலானால் சேதம் மதிப்பிடவே முடியாது. இத்தகைய ஆபத்திலிருந்து பூமி துயரப்படாமல் நீதான் காப்பாற்றவேண்டும்.




82. ரசநா ரத்ந ரூபேண பயோதி ரசநா த்வயா!


ப்ரசாந்த தநுஜக்லேசா பரிஷ்கரணம் அர்ஹதி!!




இவள் ஸமுத்திரங்களையே ஒட்டியாணமாகக் கொண்டவள்.(ரநா என்பதற்கு ஒட்டியாணம் என்றும் ஆபரணம் என்றும் பொருள். இதை காஞ்சீ என்றும் கூறுவர்). ஒட்டியாணத்தில் ரத்தினங்களுக்கு குறைவில்லை. ஆனால் அவை ஒன்றும் தென்படுவதில்லை. அதில் நடுநாயகமாக மணியொன்றிருக்கும். அது நீர்தான், நீர்தான் அதில் பதிக்கப்பெற்ற நடுநாயக நீலமணியாகத் திகழ்கிறீர். ஆனால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். விம்முகிறாள். அவளுடைய கிலேசம் தொலைய வேண்டுமானால் அஸுரர்கள் அழிந்தாக வேண்டும். ஆதலால் தேவரீர் அவளை அழகுறச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.




83. கம்ஸப்ரப்ருதிபிஸ்ஸேயம் சல்யைரிவ ஸமுத்த்ருதை:


சிரம் பவது தே ப்ருத்வீ சேஷமூர்த்தே: சிகண்டக:




கம்ஸன் முதலானவர்கள் பூமியில் தைக்கும் முட்கள் போன்றவர்கள். அவற்றைப் பிடுங்கித்தான் ஆகவேண்டும். அவர்கள் அழிந்தால் அவள் பாரம் நீங்கி லேசாக ஆகிவிடுவாள் சேஷிரூபியாயிருந்து நீ அவளைத் தலையில் தாங்குகிறாய் ( சேஷாத்மநா து பவதீம் சிரஸா ததாதி-ஸ்ரீ பூஸ்துதி) . சிகண்டகம் என்பது சிகையில் ஒரு பகுதியை எடுத்து அலங்காரமாக ஒரு முடிச்சாகப் போடுவது. அது தலைக்கு பாரமாவதில்லை. அதுபோல் இந்த பூமியும் உமது சிரஸ்ஸில் நீடூழிகாலம் பாங்காகத் திகழவேண்டும்.




84. ப்ரபோத ஸுபகை: ஸ்மேரை: ப்ரஸந்நை: சீதலைஸ்ச ந:


கடாக்ஷை: ப்லாவய க்ஷிப்ரம் க்ருபைகோதந்வத் ஊர்மிபி:




நீ கடாக்ஷிக்க வேண்டும். உனது கடாக்ஷங்களுக்குத்தான் எவ்வளவு பெருமை! நீ விரைந்து கடாக்ஷித்தருளவேண்டும். கடாக்ஷத்தினால் நனைத்தருள வேண்டும். பள்ளியெழுந்தருளும்போது கண்மலர்கின்ற அழகினை யாரே அளக்க இயலும். கள்ள நித்திரை செய்தாலும் விழித்தெழுவது பரம் போக்யமாயிருக்கும். மேலும் அவற்றின் பெருமைகள் கூறப்படுகின்றன. ஸ்மேரை:- புன்முறுவல் செய்கின்றன. தெளிவாக இருக்கின்றன. அனுக்கிரஹம் செய்கின்றன. சில்லென்று இருக்கின்றன. மேலும் கருணையென்னும் கடலின் அலைகள் போலிருக்கின்றன. அத்தகைய கடாக்ஷங்களாலே நீ எங்களை நனைத்தருள வேண்டும்.




85. த்வயி ந்யஸ்தபராணாம் ந: த்வமேவதாம் க்ஷந்தும் அர்ஹஸி! விதிதாசேஷவேத்யஸ்ய விக்ஞாபந விடம்பநாம்.!!




நாங்கள் யார்? உன்னைச் சேர்ந்தவர்கள். உன்னிடம் பரஸமர்ப்பணம் பண்ணியவர்கள். ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள். யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்று சொன்னவன் நீ. யாருக்கு எப்போது எது செய்ய வேண்டும் என்பதை நன்றாகவே அறிந்தவன் நீ! இதில் நாங்கள் சொல்ல வேண்டியதென்று ஒன்றுமேயில்லை. விண்ணப்பம் செய்வது எங்களின் பகட்டான பதட்டமான செயல். இதை மன்னித்தருள வேண்டும்.




86. இத்தம் வததி தேவாநாம் ஸமாஜே வேதஸா ஸஹ!


வவந்தே ப்ருதிவீ தேவம் விநத த்ராண தீக்ஷிதம்!!




இவ்வாறு தேவர்களின் கூட்டமானது பிரமனுடன் சேர்ந்து முறையிட்டது. அப்பொழுது ப்ருத்வீயானவள் தேவனை வணங்கினாள். அவரும் வணங்கியவர்களை ரக்ஷிப்பதிலே திக்ஷையுடையவ்ன் ஆயிற்றே!




87. தநுமத்யா விசாலாக்ஷீ தந்வீ பீநபயோதரா


மாயேவ மஹதீ தஸ்ய வநிதாரத்ந ரூபிணீ!!




பூமிதான் எவ்வளவு அழகாக இருக்கிறாள். மெல்லிய இடை. விசாலமான அகன்ற கண்கள். ஒல்லியான வடிவு. பருத்த திருமுலைத்தடங்கள். (தந்வீ துங்கஸ்தந பரநதா- கோதாஸ்துதி). பெரியதொரு மாயை போன்று தோற்றமளிக்கிறாள். அவனே பெரிய மாயன். அவனை சேர்ந்தவளன்றோ! வநிதாரத்னமாகத்தானே அவனின் மாயை தோற்றமளிக்கிறாள். அதிசயம்! மங்கையர் திலகம். பெண்குலத்துக்கே ரத்னம் போல் திகழ்கிறாள்.




88. ஆபத்தமண்டலைர் ப்ருங்கை: அலகாமோத மோஹிதை: அயத்நலப்தாம் பிப்ராணா மாயூரச்சத்ர ஸம்பதம்!!




அவள் குனிந்து ஸேவிக்கின்றாள். அப்படி குனிந்து எழுந்திருக்கும்நிலையில் ஒரு அனுபவம். கந்தவதீ ப்ருத்வீ என்பது போல் அவளுக்கு ஸ்வாபாவிகமான நறுமணம் உண்டு. அவளுடைய முன்னுச்சி மயிர்களில் ஒரு வாசனை. (மௌளி கந்த ஸுபகாம்-கோதாஸ்துதி) . அவற்றால் ஈர்க்கப்படுகின்றன வண்டினங்கள். அவற்றில் பல கோஷ்டிகள். இது பூமியின் சிரஸ்ஸில் உள்ள மலர்களின் மணமோ அல்லது அலக மணமோ என்று! அவை மொய்க்கின்றன. அதனால் பல மண்டலங்கள்(வட்டங்கள்). ஆகவே அவளின் முயற்சியின்றியே அவள் தலையில் மயில்கண் குடை அமைந்துவிட்டதாம்.




89. ப்ரியஸந்தர்சநாநந்த ஜநிதைர் அச்ரு பிந்துபி:


ந்யஸ்த மௌக்திக நைபத்யை: பரிஷ்க்ருதபயோதரா!!




கணவனைக் கண்ட மகிழ்ச்சிதான் என்னே! அவை கண்ணீர்த்துளிகளாக உதிர்கின்றன. அவை முத்துக்களாய் திருமார்பில் படிகின்றன. அன்றியும் அவள் மார்பகத்திற்கு ஒரு முத்தாடையாக திகழ்கிறது. திருமார்பகமும் எவ்வளவு பரிஷ்காரமாக இருக்கிறது.




90.ப்ரஸ்புரந்தம் ப்ரியஸ்யேவ பரிரம்பாபிலாஷிணம்


தக்ஷிணாதிதரம் பாஹும் தக்ஷிணா பஹ்வமந்யத




அழகான சகுனம். இடதுகை துடிக்கின்றது. இவள் ஸமர்த்தை. தனது ப்ரியனின் கரம் துடிப்பதை கண்டாள். தனக்கும் அதே நிலைதானே. இதற்கு பலம் பர்த்தாவின் அணைத்தல்தானே. இத்துடிப்பினால் அவளுக்கு ப்ரியனிடத்தில் போலே தனது இடது கையிலும் பஹுமானம் ஏற்பட்டுவிட்டது.




91. விபதஞ் ச ஜகாதைஷா விபஞ்சீமதுரஸ்வநா


விலக்ஷ ஸ்மிதஸம்பிந்ந மௌக்திகாதர வித்ருமா




இவளுடைய குரலில்தான் என்னே அழகு! விபஞ்சி-வீணாநாதம் போன்ற குரல். யாழின் இசையொத்த இனிய குரலுடன் விண்ணப்பம் செய்கின்றாள். அப்போது அவளுக்கு ஏற்பட்டது விலக்ஷ ஸ்மிதம்- ஆச்சர்யத்துடம் கூடிய அல்லது வெட்கத்துடன் கூடிய சிரிப்பு எனக் கொள்ளலாம். அதோடு இணைந்தது உதட்டின் சோபை. அது பவளம் போன்றது. ”சாருததீ” . பல்வரிசை முத்துக்கள் கோர்த்தன போல் அமைந்தது போல் அந்த சோபைக்கு அந்தமேயில்லை. புன்முறுவல்,துல்லியமான தெரிந்தும் தெரியாததுமான பல்வரிசை,பவளப் பொலிவுடன் உதடு,அத்தகைய வாயில் உண்டாகும் திவ்யமான ஒலி. அத்தகைய திவ்ய சௌந்தர்யத்துடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் விபத்தைக் கூறலானாள்.




92. அத தாந் பவ்யயா வாசா பகவாந் ப்ரத்யபாஷத


ப்ரதிச்ருத்ப்ராப்த நிர்ஹ்ராத பாஞ்சஜந்யாபிநந்த்யயா




பிறகு எம்பெருமாள் க்ஷேமகரமான வார்த்தையால் அத்தேவர்களுக்கும் தன் தேவிக்குமாக பதில் அளித்தான். அவன் வார்த்தை அருகில் திருக்கரத்தில் குடியேறி வீற்றிருக்கும் சங்கினில் புகுந்து அச்சங்கும் ஆம் ஆம் என்று ஆமோதிப்பது போன்றே கம்பீரமாயிருந்தது.




93. மாபைஷுர் அஸுராநீகாத் பவந்தோ மதுபாச்ரயா:


மதாக்ஞாம் அநவக்ஞாது: பரிபூத்யா ந பூயதே




நீங்கள் அனைவரும் என்னைச் சேர்ந்தவர்கள் (மாபைஷு) . ப்ரபன்னர்களுக்கு பயமேன். என்னை மதிப்பவனுக்கு பரிபவம் ஏற்படாது. எனது கட்டளையை மீறுபவன் யாராயிருந்தாலும் அவன் எனக்குத் துரோஹி. அவன் நிம்மதி அடையமாட்டான். ஆக்ஞயை பரிபாலனம் பண்ணிவருகிற உங்களுக்கு பயமேன்?






94. அவதார்ய புவோபாரம் அவதாரோ மமாமரா:


அநாதி நிதநம் தர்மம் அக்ஷதம் ஸ்தாபயிஷ்யதி




அவதாரம் என்ற சொல்லின் பொருளை விளக்கும் ஸ்லோகம். அவதாரம் என்றால் இறங்கி வருதல். நான் இறங்குவது இறக்கிவைக்கவும் ஏற்றி வைக்கவுமே! பூமியினுடைய பாரம் இனி இறங்கிவிடும். அன்றியும் ஆதி அந்தமில்லாத தர்மத்தை நலிவுபெறாமல் என் அவதாரம் செய்துவிடப்போகிறது.




95. யாவதிஷ்டபுஜோ யாவத் அதிகாரம் அவஸ்த்திதா:


பரிபாலயத ஸ்வாநி பதாநி விகதாபத:




உங்களுக்கு இனி ஆபத்துக்கள் இல்லை. தங்கள் தங்கள் ஸ்தானத்தில் இருந்து பரிபாலனம் பண்ணுங்கள். உங்களில் யார் யார் எவ்வளவு யாக யக்ஞங்கள் பண்ணியிருக்கிறீர்களோ அதற்கேற்றவாறு பலனை அனுபவியுங்கள். மேலும் யார் யாருக்கு என்ன என்ன அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளதோ அதற்கேற்றவாறு நடந்து கொண்டு ஆட்சி செலுத்தி வாருங்கள்.




96. தமநாத் தநுஜேந்த்ராணாம் த்ரக்ஷ்யத த்ரிதசாரிபா:


பூயோபி லகுதாம் ப்ராப்தாம் புவமுல்லாகிதாமிவ




தநுஜர்களின் (அசுரர்கள்) தலைவர்களை நான் அழித்து விடுகிறேன். தேவர்களின் அதிபர்களாக இருக்கும் நீங்கள் பூமியின் பாரம் குறைந்து லேசாக இருக்கப்போவதையும் வியாதியிலிருந்து விடுபட்ட மங்கை போல் இப்பூமி ஆகப்போவதையும் காணப்போகிறீர்கள். (தமநம் என்றால் அடக்குதல்,அல்லது அழித்தல்) த்ரிதசாதிபர்கள் என்று ப்ரமன் முதலியோரைக் குறிப்பதும் தநுஜேந்திரர்கள் என்று கம்சன் முதலானோரைக் குறிப்பதும் என்பதாக ஸ்வாமி குறிப்பிடுகிறார்.




97. தைதேய ம்ருகஸங்காதே ம்ருகயாரஸபாகிபி:


பவத்பிரபி மேதிந்யாம் பவிதவ்யம் நராதிபை:




அஸுரர்களை மிருகங்களுக்கு சம்மாக பாவிக்கிறார். ஸங்காதம் என்பதற்கு கூட்டம் என்பதோடு அழித்தல் என்றும் பொருள். ம்ருகயா ரஸம் என்பது வேட்டையாடுபவர்களுக்குத்தான் விளங்கும். அந்த ரஸத்தில் நீங்களும் பங்கு பெற வேண்டாமா? நீங்களும் மேதினிக்கு பரிந்தபடியால் பூமியில் பிறக்க வேண்டும். வேட்டை என்பது விளையாட்டு. நான் அவர்களை அழிக்கப்போவதும் விளையாட்டே! இதில் எந்த ச்ரமமும் இல்லை. இருப்பினும் அவ்வேட்டையில் நீங்களும் பங்கு கொண்டால் அநத ரசானுபாவத்தை அடையலாம். த்ரிதசாதிபர்களே என்று யோசிக்க வேண்டாம். அங்கும் நராதிபர்களாகத் தோன்றி இதில் பங்கு கொள்ளுங்கள்.




98. இதி தாந் அநகாதேச: ஸமாதிச்ய ஜநார்தந:


அவதீரித துக்தாப்தி: மதுராயாம் மநோ ததே




இவ்வாறு ஜநார்த்தனன் தூயதான கட்டளையை பிறப்பித்து அவர்களுக்கு உத்தரவிட்டு அடுத்தகணமே திருப்பாற்கடலில் ஆசையற்று, மதுரையில் பிறக்க மனதை வைத்துவிட்டான். ஜநார்த்தனன் என்ற திருநாமம் மிகவும் அழகானது. ஜனங்களை பீடிப்பவன் என்று பொருள். இச்சப்தத்தை கீதையில் அனுபவித்தல் அழகு.




99. ஆச்வாஸ்ய வாகம்ருதவ்ருஷ்டிபி: ஆதிதேயாந்


தைதேய பார நமிதாம் ப்ருதிவீஞ்ச தேவீம்


ப்ராதுர்புபூஷுரநகோ வஸுதேவ பத்ந்யாம்


பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா:




இவ்வாறு தேவர் குழாம்களைத் தனது அமுதம் பொழியும் வாக்குகளால் ஸமாதானப்படுத்தி, அஸுரர்களின் பாரத்தினால் கூனியிருக்கும் பூமாதேவியையும் ஆச்வாஸப்படுத்தி வஸுதேவ பத்னியிடம் பிறக்கத் திருவுள்ளம் கொண்டு ச்ரியப்பதியான எம்பெருமான் தயையின் சங்கேதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.




100. ஸாதூநாம் ஸ்வபதஸரோஜ ஷட்பதாநாம்


தர்மஸ்ய ஸ்திதிம் அநகாம் விதாது காம:


யத்கர்ப்பே ஜகதகிலம் ஸ ஏவ கர்ப:


தேவக்யாஸ் ஸமஜநி தேவதேவவந்த்ய:




தனது திருவடித் தாமரைகளில் வண்டென விளங்கும் ஸாதுக்களை ரக்ஷிக்கவும் தர்மத்தை ஸ்திரமாக நிலைக்கச் செய்யவும் எவனுடைய வயிற்றில் உலகமெலாம் அடங்கியுள்ளதோ அவனே தேவகியின் கர்ப்பமாக ஆனான். அந்த கர்ப்பம் தேவாதி தேவர்களெல்லாம் ஸேவிக்கத் தக்கதாயிற்று.




வந்தே எனத் தொடங்கிய ஸர்கம் வந்த்ய: என இனிதே நிறைவுற்றது।




கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே




ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம;




ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம: